விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் மகாநதி சீரியலும் ஒன்று. இந்தத் தொடர் நான்கு சகோதரிகளை மையமாக வைத்து கதை நகர்ந்து கொண்டிருக்கின்றது. சீரியலில் சந்தானம், தன் குடும்பத்தை விட்டு துபாயில் வேலை செய்து இருந்தார். அவருடைய குடும்பத்தினர் கொடைக்கானலில் வசித்து இருந்தார்கள். எதிர்பாராத விதமாக சந்தானம் இறக்க மொத்த குடும்ப பாரம் கங்கா,காவேரி மீது வருகிறது. பின் பொருளாதார பிரச்சனைக்காக காவிரி குடும்பம் சென்னைக்கு வந்தார்கள்.
சூழ்நிலைக்காக விஜய்- காவிரி இருவரும் ஓரு வருட காண்ட்ராக்டில் திருமணம் செய்து கொண்டார்கள். இது வீட்டில் யாருக்கும் தெரியாது. பின் நாளடைவில் இருவருமே காதலிக்க தொடங்கி விட்டார்கள். ஆனால், இதை அவர்கள் இருவருமே சொல்லிக் கொள்ளவில்லை. இன்னொரு பக்கம் தன்னுடைய தங்கை நர்மதா காதலுக்காக நிவீனை எப்படியோ சம்மதிக்க வைத்து திருமணம் செய்து வைத்தார் காவிரி. ஆனால், நிவீனுக்கு இதில் சம்மதம் இல்லை. வற்புறுத்தினால் தான் இந்த கல்யாணம் செய்து கொண்டார்.
மகாநதி சீரியல்:
இன்னொரு பக்கம் காவிரி-விஜய்யை பழிவாங்க அவருடைய தம்பி, ராகினி இருவரும் விஜயின் காதலி வெண்ணிலாவை தேடி அலைந்து இருந்தார்கள். பின் காவிரி-விஜய் இருவரும் சந்தோசமாக தங்கள் வாழ்க்கையை வாழ தொடங்கி விட்டார்கள். அப்போது வெண்ணிலா மீண்டும் வருகிறார். இதனால் விஜய்-காவிரி இருவருக்கும் இடையே ப்ரச்சனை வருகிறது. அதோடு இவர்கள் காண்ட்ராக்ட் திருமணம் தெரிந்தவுடன் காவிரியை, அவர் அம்மா வீட்டில் அழைத்து சென்று விட்டார்கள்.
சீரியல் ட்ராக்:
மேலும், காவிரி-விஜய் இருவரும் காதலிக்கிறார்கள். வெண்ணிலாவுக்கு பழைய நினைவுகள் வந்து விஜயை காதலிக்கிறார். விஜய், வெண்ணிலாவிடம் காவிரியை திருமணம் செய்த விஷயத்தை சொல்லியும் அவர் பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் காவிரி கர்ப்பமாக இருக்கிறார். இந்த விஷயம் நிவினுக்கு தெரிந்தது. ஆனால், காவிரி சொல்லக்கூடாது என்று சொல்கிறார். பின் காவிரி கர்ப்பமாக இருக்கிறார் என்று தெரிந்ததில் இருந்து விஜய்யை பிடிக்க முடியவில்லை.
நேற்று எபிசோட்:
சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறார். பின் அவர் பார்த்து பார்த்து தன்னுடைய மனைவியை கவனித்துக் கொள்கிறார். இருவருக்கும் இடையே காதலும் அன்பும் அதிகமாகிறது. இன்னொரு பக்கம் வெண்ணிலாவின் மனதை மாற்றி காவிரி, விஜயை பிரிக்க ஒரு கும்பலை சதி தீட்டுகிறது. நேற்று எபிசோட்டில் ஒரு நாள் முழுவதும் காவிரி-விஜய் இருவரும் ஒன்றாக இருக்கிறார்கள். காவிரிக்கு வீட்டிற்கு செல்ல மனமே இல்லை. இருந்துமே வேறு வழி இல்லாமல் தன்னுடைய மனைவியை அனுப்பி வைத்தார் விஜய்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் வீட்டிற்கு வந்த காவிரி இடம் பொருட்காட்சியில் நடந்ததை விசாரிக்கிறார்கள். ஆனால், காவிரி ஏதேதோ சொல்லி சமாளித்து விடுகிறார். பின் விஜய், நிவீனை சந்தித்து பேசுகிறார். அப்போது விஜய், காவிரி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொல்லி நன்றி சொல்கிறார். உடனே நிவின், காவிரி தான் உங்களிடம் சொல்ல வேண்டாம் என்றார். நீங்கள் இப்படி இருப்பதற்கு நானும் ஒரு காரணமாக இருக்கிறேன் என்று நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது என்று பேசுகிறார். உடனே விஜய், நிவினை கட்டி பிடித்து இருவருமே தங்களுடைய பழைய பிரச்சினைகளை மறந்து விடுகிறார்கள். பின் வீட்டில் விஜய், காவிரியுடன் இருந்த நினைவுகளை நினைத்து சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார். பின் அவர் காவிரியை வர சொல்கிறார். காவிரியும் விஜய் பார்க்க வருகிறார். அப்போது இருவருமே ரொம்ப எமோஷனாக தங்களுடைய குழந்தையை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.