இதனால் கொஞ்சம் கிருக்குத்தனமாக செயல்பட்ட மஹத், சமயலறையில் டீ போட்டு கொண்டிருந்த யாஷிகா மற்றும் ரித்விகாவை வம்புக்கிழுத்து அவர்கள் போட்டுக்கொண்டிருந்த டீயை கீழே ஊற்றினார். மஹத் இதனை டாஸ்க்கிற்காக செய்கிறார் என்று உணராத ரித்விகா மற்றும் யாஷிகா இருவரும் மஹத்திடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
மஹத் பல முறை யாஷிகா போட்டுக்கொண்டிருந்த டீயை கீழே ஊற்றியதால் ஒருகட்டத்தில் பொறுமை இழந்த யாஷிகா மஹத்தை விளக்குமாறு கொண்டு அடிக்க முற்பட்டார். ஆனால், அவரை ரித்விகா தடுத்து விட்டார்.இருப்பினும் மஹத்தை விளக்குமாறுடன் துரத்தி கொண்டே இருந்தார் யாஷிகா. இதனை கண்ட ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியாகினர். இதே போல சில நாட்களுக்கு முன்னர் ஐஸ்வர்யா டாஸ்க்கிற்காக சென்றாயன் குடித்துக் கொண்டிருந்த டீயை குப்பையில் ஊற்றியபோது ஐஸ்வர்யாவிற்கும், சென்றாயனிற்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. ஆனால், அப்போது யாஷிகா வாயே திறக்க வில்லை.
ஆனால், தான் போட்டுக்கொண்டிருந்த டீயை கீழே ஊற்றியதும் மஹத்தை விளக்குமாறு கொண்டு விரட்டிய யாஷிகாவின் இந்த செயல் ரசிகர்களுக்கு எரிச்சலை தான் ஏற்படுத்தியது.அதே போல இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்தே ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா தான் வரம்பு மீறிய சில செயல்களை செய்து வருகின்றனர். அதுவும் இவர்கள் இருவரும் வடா மாநிலத்தில் இருந்து வந்ததால் இவர்கள் மற்ற தமிழ் பெண்களை விட பல வரம்பு மீறிய செயல்களை செய்து வருகின்றனர். மேலும், ரசிகர்களும் வலைத்தளங்களில் வட மாநிலத்தில் இருந்து இவர்கள் தமிழ் போட்டியாளர்களை கேவலப்படுத்தி வருகின்றனர் என்றும் குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர்.




