பிக் பாஸ் சீசன் 6ன் வெற்றியாளர் இவர் தான் – மகேஸ்வரி சொன்ன அந்த பெயர். நம்ப முடியலையே

0
459
vjmaheswari
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6ல் வெற்றி பெறும் நபர் குறித்து விஜே மகேஸ்வரி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆறாவது வாரம் சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருக்கிறார். வழக்கம் போல் போட்டியாளர்கள் ஓவ்வொருவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ஜிபி முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல், ஷெரினா ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். கடந்த வாரம் நடந்த நான்காவது எவிக்ஷனலில் விஜே மகேஷ்வரி வெளியேறி இருக்கிறார். மகேஸ்வரி வெளியேறுவதற்கு முக்கிய காரணமே அவரது திமிரான பேச்சுக்களும் விக்கிரமனுடான பிரச்சனைகளும் தான்.

- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் மகேஸ்வரி:

ஆரம்பம் முதலே தனக்கென்று ஒரு கேங்கை அமைத்துக் கொண்டு குருப்பீசத்தில் ஈடுபட்டார் மகேஸ்வரி. மேலும், அடிக்கடி தன்னுடைய குரூப்புடன் இணைந்து விக்ரமனை தொடர்ந்து வம்பு இழுத்துக் கொண்டு இருந்தார். இதனாலேயே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஹேட்டர்ஸ்கள் உருவானது. அதிலும், கடந்த வாரம் மைனாவுடன் சேர்ந்து விக்ரமனை பாடி லாங்குவேஜ் செய்து மகேஸ்வரி கேலி செய்து இருந்தார். அதிலிருந்து இவருக்கு ஹேட்டர்ஸ்கள் மேலும் மேலும் அதிகரித்தது.

நிகழ்ச்சிக்கு பின் மகேஸ்வரி:

பிக் பாஸ் பின் வெளியேறிய மகேஸ்வரியை அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி வரவேற்று இருந்தார்கள் .
இதை தொடர்ந்து வெளியேற்றத்திற்கு பின்னர் வீடியோ ஒன்றை மகேஸ்வரி வெளியிட்டு இருந்தார். அதில் அவர், ‘அனைவருக்கும் நன்றி! நான் மிகவும் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன். என்னுடைய வெளியேற்றத்தை நினைத்து நான் வருத்தப்படவில்லை. ஏனென்றால், நான் என்னுடைய 100 சதவீதத்தை கொடுத்தேன். எனக்கு நீங்கள் காண்பிக்கும் அனைத்து அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி.

-விளம்பரம்-

மகேஸ்வரி அளித்த பேட்டி:

அதனால் நான் என்னுடைய வெளியேற்றத்தை பற்றி கவலைப்படவில்லை. என்னுடைய விளையாட்டை ஆதரித்த அனைவருக்கும் மிக்க நன்றி’ என்று கூறி இருந்தார். மேலும்,நிகழ்ச்சிக்கு பின் இவர் பல வீடியோக்களை வெளியிட்ட வண்ணம் இருந்தார். அது மட்டும் இல்லாமல் பேட்டிகளையும் கொடுத்து வருகிறார்.

விக்ரமன் குறித்து சொன்னது:

அந்த வகையில் ஒரு பேட்டியில் மகேஸ்வரி விக்ரமன் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர், விக்ரமன் பிக் பாஸ் வீட்டில் கண்டிப்பாக 100% இறுதிவரை இருப்பார். தனம் மற்றும் அசிமிடம் இல்லாத ஒன்று விக்ரமனிடம் இருக்கிறது. அது, அவருடைய நிலைப்பாடும், அமைதியும் தான். விக்ரமன் ஸ்ட்ராங்கான போட்டியாளர் என்று கூறியிருக்கிறார்.

Advertisement