சிவகார்த்திகேயன் பற்றி மனம் உருகிய மா.கா.பா ஆனந்த்!

0
1595
siva makapa
- Advertisement -

சிவகார்த்திகேயன் பாணிலயே மா.கா.பாவும் டிவியில இருந்து சினிமாவுக்குப் போனார். ஆனா, அவர் இன்னும் அந்த அளவுக்கு ஜொலிக்கலையேங்கிற விமர்சனம் உங்க மேல இருக்கே… என்ற பத்திரிகை நிருபரின் கேள்விக்கு மா.கா.பா கூறிய பதில் இது தான்.

-விளம்பரம்-

அப்படிச் சொல்றவங்களுக்கு நான் தெளிவுப்படுத்தணும்னு நினைக்குறேன். டிவியில இருந்து சினிமாவுக்கு வந்துட்டாருப்பானு ஈஸியா சொல்லிடுறாங்க. அதுக்கு, அவங்க எவ்ளோ உழைப்பு போடுறாங்க தெரியுமா?

- Advertisement -

Makapa-Anandஉதாரணத்துக்கு, ‘ரெமோ’ படத்துல நர்ஸ் வேஷம் போட்டு நடிக்கிறார்னா சாதாரண விஷயம் இல்லை. ஒன்பது மணி ஷூட்டிங்கிற்கு ரெண்டு மணிக்கெல்லாம் எழுந்து கிளம்பி மேக்கப் போட்டு ஸ்பாட்டுக்கு வந்து சோர்வு முகத்துல தெரியாம நடிக்கிறதுனா சும்மாவா? அது உழைப்புக்கும் மேலனு தான் சொல்லணும். அதுக்கு கிடைச்ச பேர் புகழ் தான் அவரை உயர்த்திருக்கு. நான் இன்னும் அந்தளவு முயற்சி செய்யாம இருக்கலாம்.

இந்த மாதிரி கம்பேர் பண்ணுவாங்க, சரியாயில்லைனா திட்டுவாங்க. அதுக்கான எல்லா உரிமையும் அவங்ககிட்ட இருக்கு. எனக்கு இது போதும்னு நினைக்கிறேன். நானும் என்னை சுத்தி இருக்கவங்களையும் சந்தோசமா இருக்கணும்கிறது தான் என் சக்சஸ்.

-விளம்பரம்-

Makapa-Anand

ரேடியோலயும் டிவியிலயும் என்னால வெயிட் பண்ணி சாதிக்க முடிஞ்சதுனா சினிமாவில சாதிக்க இன்னும் சில காலம் காத்திருக்கணும்னு தெரிஞ்சுதான் உள்ளேயே வந்தேன். வெற்றி வர வரைக்கும் நான் காத்திருப்பேன்.

Advertisement