பிரியங்கா- மணிமேகலை விவகாரம் குறித்து மாகாபா கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நான்கு சீசன்களை கடந்து தற்போது ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது ‘குக் வித் கோமாளி சீசன் 5’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த முறை நிகழ்ச்சியில் தாமுவுடன் மற்றொரு நடுவராக மாதம்ப்பட்டி ரங்கராஜ் களம் இறங்கி இருக்கிறார்.

இந்த முறை நிகழ்ச்சியை ரக்ஷன் மற்றும் மணிமேகலை தொகுத்து வழங்கி வருகிறார்கள். மேலும், இதுவரை இந்த நிகழ்ச்சியிலிருந்து குறைவான மதிப்பெண்களை பெற்று ஸ்ரீகாந்த் தேவா, வசந்த், ஜோயா, பூஜா, திவ்யா துரைசாமி, விடிவி கணேஷ் ஆகியோர் வெளியேற்றி இருந்தார்கள். இந்த வாரம் செமி பைனல் நடைபெற இருப்பதாகவும், இதில் பிரியங்கா, சுஜிதா, இர்பான், அக்ஷய் கமல் ஆகிய நான்கு பேர் மோத இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியிலிருந்து திடீரென மணிமேகலை விலகி இருக்கும் தகவல் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
குக் வித் கோமாளி 5:
இது தொடர்பாக மணிமேகலை போட்ட பதிவில், குக் வித் கோமாளி நிகழ்ச்சி இனி நான் இல்லை. நான் ரொம்ப நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும், எப்போதும் என்னுடைய 100% முயற்சியையும், கடின உழைப்பையும் கொடுத்தேன். 2019 இல் இருந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருக்கிறேன். அங்கிருந்து தான் ஸ்ட்ரெஸ் பஸ்டர் நிகழ்ச்சியின் பயணம் தொடங்கியது. ஆனால், சுயமரியாதையை விட முக்கியமானது எதுவுமே கிடையாது. என்னுடைய வாழ்க்கையின் எல்லா நேரத்திலும் நான் அதை கண்டிப்பாக பின்பற்றி வருகிறேன்.

மணிமேகலை பதிவு:
புகழ், பணம், தொழில் வாய்ப்புகள் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. சுயமரியாதை என்று வரும்போது எல்லாமே இரண்டாம் பட்சம் தான். அதனால் தான் நான் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டேன். இந்த சீசனில் மற்றொரு பெண் தொகுப்பாளர் ஆதிக்கம் செலுத்துகிறார். குறிப்பாக, அவர் ஆங்கர் பார்ட்டில் எல்லாம் தலையிடுகிறார். அவர் நிகழ்ச்சியில் குக்காக இருக்க வேண்டும். ஆனால், அதை அவர் அடிக்கடி மறந்து விட்டு வேண்டுமென்றே என்னை வேலை செய்ய விடாமல் ஆங்கர் பகுதிகளில் நிறைய குறுக்கிடுகிறார்.
நிகழ்ச்சி குறித்து சொன்னது:
இதற்கு முன்பு போல் இருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி இல்லை. அதனால் தான் நான் இந்த நிகழ்ச்சியில் தொடர விரும்பவில்லை. நான் 2019 ஆம் ஆண்டு முதல் இந்தத் துறையில் இருக்கிறேன். இது என்னுடைய 15-வது ஆண்டு. நிறைய ஏற்றத்தாழ்வுகள் இருந்தது. ஆனால், இது போன்று என்னை யாரும் நடத்தியது கிடையாது. ஆனால், எனக்கு இதை செய்த நபருக்கு நான் இன்னும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வாழுங்கள் வாழ விடுங்கள். சீசன் 1 முதல் சீசன் 4 வரை நான் சேர்ந்து பணியாற்றியதில் ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன். எல்லோருக்கும் நன்றி என்று எமோஷனலாக பதிவிட்டு இருந்தார்.
#Makapa bro on #Priyanka vs #Manimegalai issue.
— Ahamed Inshaf (@InshafInzz) September 16, 2024
He said that I'm not part of the #CookwithComali5 show. What can I say about this? It's their issue, let them fight among themselves. This is very important for our country 🤣
Any thoughts?
Credits FullonCinema#PriyankaDeshpande pic.twitter.com/2E90ItT3cA
மகாபா ஆனந்த் சொன்னது:
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பேட்டியில் தொகுப்பாளர் மகாபா ஆனந்த், நான் அந்த நிகழ்ச்சியிலேயே இல்லை. ஒருவேளை நான் அங்கு இருந்திருந்தால் இவங்க சரி, இவங்க தப்பு என்று சொல்லுவேன். அது அவர்களுடைய கருத்துதான். காட்டு வழியாக போய்க்கொண்டிருக்கிறோம். அங்க ரெண்டு யானை அடித்துக்கொண்டு இருக்குதுன்னா, அங்கு இறங்கி போய் சமாதானம் பண்றதுக்கு எல்லாம் போகக்கூடாது. அது நம்மள நசுக்கி போட்டு அது பாட்டுக்கு போய்விடும். அதனால் இதை எட்ட நின்று வேடிக்கை பார்ப்பதுதான் நல்லது. அது நாட்டுக்கு ரொம்ப முக்கியமான விஷயமும் கிடையாது என்று கூறியிருக்கிறார்.






