நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை கொரோனாவால் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும், உயிர் இழந்தும் உள்ளார்கள். சாதாரண மக்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை என ஒருவரையும் இந்த கொரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை. அதிலும் ஹாலிவுட் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்கள் சமீபத்தில் கொரோனாவால் உயிர் இழந்து உள்ளனர்.
மேலும், இந்த கொரோனா நேரத்தில் பல பேர் அநியாயமாக உயிர் இழந்து உள்ளார்கள். அந்த வகையில் தற்போது பிரபல மலையாள நடிகர் கொரோனாவால் உயிர் இழந்து உள்ளார். எஸ். ஏ. ஹாசன் என்பவர் ஹலோ துபாய்க்காரன் என்ற மலையாள படத்தை தயாரித்து நடித்திருந்தார். இவர் கேரளாவின் ஆலுவா பகுதியை சேர்ந்தவர். இவர் துபாயில் டெக்ஸ்டைல் தொழில் செய்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன் இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனால் இவரை சார்ஜாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். பின் அவரின் உடல் நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் எஸ். ஏ. ஹாசனுக்கு கொரோனா தொற்று இருப்பதை கூறினார். பிறகு எஸ். ஏ. ஹாசன் அவர்களுக்கு செயற்கை சுவாசக்கருவி வைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் எஸ். ஏ. ஹாசன் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். ஹாசனுக்கு மனைவியும், 3 குழந்தைகளும் இருக்கின்றனர். எஸ். ஏ. ஹாசன் மறைவால் குடும்பத்தினர் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இன்று தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணத்தால் தி மு க எம் எல் ஏ அன்பழகன் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.