சமீப காலமாக சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பல பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். நடிகைகள் இது போன்ற தொல்லைகளுக்கு உள்ளாவதை கண்டித்து இந்தி நடிகை மல்லிகா சராவத் ஒரு புது விதமான போராட்டத்தில் தன்னை உடப்படுத்தி எடுத்துக் கொண்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.
“Every minute we don’t do something there is a woman suffering abuse “ @freeagirlindia #freeagirl #schoolforjustice #womensrights #supportgirls #stoprape #cannes pic.twitter.com/F8aegKBnum
— Mallika Sherawat (@mallikasherawat) May 15, 2018
சமீப காலமாக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமா துறையில் அதிகம் காணப்பட்டு வருகிறது. சமீபத்தில் தெலுகு தயாரிப்பாளர் ஒருவரும் நடிகைகளை விபச்சாரத்தில் வலுகட்டாயமாக ஈடுபடுத்தி பாலியல் தொழில் செய்து வந்தார் என நடிகைகள் புகார் ஒன்றையும் அளித்திருந்தது பெரும் சர்சையையும் ஏற்படுத்தியது. இதனால் பல நடிகைகளும் சினிமாவில் தங்களை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபட வைக்கின்றனர் என்றும் அந்த புகாரில் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை பற்றி விழிப்புணர்வு மேற்கொள்ள பாலிவுட் நடிகை மல்லிகா ஷராவாத் தன்னை தானே சிறையில் வைத்து பூட்டி கொண்டு அந்த புகைபடத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களுக்கு ஷாக் அளித்திருந்தார்.ஆனால், பின்னர் தான் தெரியவந்தது அவர் ஒரு சமூக அமைப்பு நடத்திய போராட்டத்திற்காக அவ்வாறு செய்துள்ளார் என்று.
இந்தியாவில் உள்ள ப்ரொத்தெல் எனப்படும் விபச்சார விடுதிகளில் இளம் பெண்கள் படும் துன்பத்தை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. அதில் பெண்கள் தங்களை ஒரு சிறைக்குள் வைத்து பூட்டி கொள்வார்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எதிற்கும் ஆண்கள் அந்த சிறையில் இருந்து பெண்களை விடுவிக்கலாம்.இதற்காக தான் மல்லிகா ஸராவத்தும் தன்னை அப்படி பூட்டிக் கொண்டுள்ளார்.