லவ் டுடே பாணியில் செல்போனை மாற்றி மாடிங்கொண்ட புது மணமகன் – போக்சோவில் கைதான சோகம் .

0
697
lovetoday
- Advertisement -

லவ் டுடே படத்தை போல செல்போன் மாற்றிக்கொண்ட போது மணமகன் செல்போனில் இருந்த விஷயம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமா உலகில் இளம் இயக்குனராக வளர்ந்து கொண்டிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் கோமாளி படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகினார். ஆனால், இவர் முதலில் குறும்படம் தான் எடுத்து இருந்தார். அதன் பின் தான் கடந்த 2019 ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் “கோமாளி” படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் லவ் டுடே.

-விளம்பரம்-

லவ் டுடே :

இந்த படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, விஜய் வரதராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். காதல் கதையை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி இருக்கிறது. படத்தில் சத்யராஜின் மகளாக இவானா நடித்திருக்கிறார். இவானா- பிரதீப் ரங்கநாதன் இருவரும் காதலிக்கிறார்கள். இதை இரு வீட்டிலும் சொல்ல நினைக்கிறார்கள். அப்போது இவானாவின் அப்பா சத்யராஜ் இருவருக்கும் ஒரு நிபந்தனையை வைக்கிறார். அதாவது, நீங்கள் இருவரும் உண்மை காதலர்கள் என்றால் ஒரே ஒரு நாள் மட்டும் உங்களுடைய செல்போன்களை மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்.

- Advertisement -

படத்தின் கதை :

பின் இருவரும் அந்த நிபந்தனையை ஒற்றுக் கொண்டு செல்போன்களை மாற்றிக் கொள்கிறார்கள். அந்த ஒரு நாள் கதை தான் படத்திற்கு முக்கிய திருப்பமாக அமைகிறது. இதனால் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதையெல்லாம் சமாளித்து இந்த காதலில் அவர்கள் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. பல சுவாரசியமான சம்பவங்களை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், விமர்சன ரீதியாக லவ் டுடே படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது.

செல்போன் மாற்றி சிக்கிக்கொண்ட மணமகன் :

லவ் டுடே சினிமா பணியில் செல்போன் மாற்றி கொடுத்த மணமகன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் சேலம் மாவட்டம் வாழப்படியை அடுத்த வேலூர் மாதா கோவிலை சேர்ந்தவர் அரவித். ஆம்புலன்ஸ் டிரைவரான இவர் சமீபத்தில் தான் திருமணம் நிச்சயக்கப்பட்டது. இந்த நிலையில் அரவிந்த் தன்னுடைய போனை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வந்த லவ் டுடே பட பாணியில் நிச்சயக்கப்பட்ட பெண் வாங்கி பார்த்துள்ளார். அரவித் போனை லவ் டுடே படத்தை போல அலசி ஆராய்ந்ததில் சில விடியோக்கள் சிக்கின.

-விளம்பரம்-

சிக்கிய வீடியோ :

அவருடைய செல்போனில் சிறுமி ஒருவரின் அந்தரங்க வீடியோ இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் எதுவும் சொல்லாமல், தனக்கு தெரியாதது போல நடந்து கொண்டார். பின்னர் அவருக்கு தெரியாமல் போலீசில் புகார் அளித்ததில் அரவித் சிக்கிவிட்டான். அரவித்திடம் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிவந்தது. அரவிந்த் இருக்கும் அதே பகுதியில் உள்ள 10 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி சில அந்தரங்க வீடியோக்களை எடுத்துள்ளார்.

அரவிந்தை கைது செய்த போலீசார் :

மேலும் அந்த விடோக்களை அவர் போனில் இருந்து நீக்காமல் இருந்துள்ளார். இந்த நிலையில் அந்த சிறுமியின் பெற்றோர்களுக்கு தகவல் சொல்லப்பட்டு வழக்கு பதியப்பட்டது. மேலும் அரவித் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இது போன்று மற்ற யாருடனாவது இப்படி பழகியுள்ளாரா என விசாரணை செய்து வருகின்றனர். இந்த தகவல் தற்போது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement