‘ப்பா, நம்பவே முடியலேயே’ உடல் எடையை குறைத்தும் படு வெள்ளையாகவும் மாறிய மண்டேலா பட நடிகை சரண்யா.

0
773
saranya
- Advertisement -

தமிழ் சினிமாவை பொறுத்த கருப்பாக இருக்கும் நடிகர் நடிகைகளுக்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. பாலிவுட்டை போல் அல்லாமல் தமிழ் சினிமாவில் நிறத்திற்கு எந்த பாகுபாடும் காட்டப்பட்டது கிடையாது. அந்த வகையில் சமீப காலமாக தமிழ் சினிமாவில் எத்தனையோ கருப்பு நாயகிகள் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டு உள்ளனர் அந்த வகையில் சரண்யாவும் ஒருவர். யோகி பாபு நடிப்பில் வெளியான மண்டேலா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. யோகி பாபு , ஷீலா நடித்த இந்த படத்தின் சரண்யாவும் ஒரு சின்ன ரோலில் நடித்து இருந்தார். கருப்பாக இருந்தால் படவாய்ப்புகள் கிடைக்காது என்ற பலரின் எண்ணங்களை தகிர்த்து தெரிந்தவர் சரண்யா ரவிச்சந்திரன்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-107.jpg

தன்னுடைய விடா முயற்சியினாலும், கடும் உழைப்பினாலும் தற்போது தமிழ் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். நடிப்புக்கு நிறம் தேவையில்லை என்பதை நிரூபித்தவர். நடிகை சரண்யா ரவிச்சந்திரன் அவர்கள் 90 குறும்படங்களில் நடித்துள்ளார்.பின் இவர் காதலும் கடந்து போகும், வடசென்னை, இறைவி என பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாலா இயக்கத்தில் உருவாகி பாதியில் நின்ற வர்மா படத்தில் இவர் நடித்திருந்தார்.

- Advertisement -

சரண்யாவின் Transformation :

இவருடைய நடிப்பை பார்த்து பாலா அவர்கள் பாராட்டி இருப்பதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூட கூறியிருந்தார். இவர் நடித்த படங்களில் எல்லாம் ஒரு விதமான பரிதாபமான லுக்கில் தான் நடித்து இருந்தார். ஆனால், நிஜத்தில் படு மாடர்ன் மங்கையாக இருக்கும் இவர், சமீபத்தில் உடல் எடையை குறித்ததை காட்ட கண்ணாடி முன்பு எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

உடல் எடையை குறைத்த சரண்யா :

அதில் 62 கிலோவில் இருந்து 53 கிலோ வந்துவிட்டதாக கூறியிருந்தார். படங்களில் கறுப்பழகியாக தோன்றும் சரண்யா சமீபத்தில் படு வெள்ளையாக மேக்கப் போட்டுகொண்டு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் பலரும் சரண்யாவா இது என்று வியந்து போய்யுள்ளனர். தற்போது சரண்யா, அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் வலிமை படத்தில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

சரண்யாவின் குடும்பம் :

தற்போது வலிமை படம் வரை வளர்ந்து இருக்கும் இவர் கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதானது இல்லை திருச்சிக்கு அருகே இருக்கும் கே கள்ளிக்குடி என்கிற கிராமத்தை சேர்ந்த பக்கா கிராமத்து பெண் சரண்யா இவரது தந்தை ஒரு விவசாயி அம்மா சித்தாள் வேலை செய்பவர். இவருக்கு 2 தம்பி இருக்கிறார்கள் இவர்களையெல்லாம் படிக்கவைக்க இவரது தாய் தந்தையர் மிகவும் கஷ்டப்பட்டார்களாம். அம்மாவின் தாலியை அடமானம் வைத்து தான் கல்லூரி படிக்கும்போது பீஸ் கட்டினாராம் சரண்யா.

சரண்யா பட்ட கஷ்டம் :

படிப்பிற்காக வாங்கிய கடன் தம்பிகளை படிக்க வைக்க வேண்டும் என்ற கடமை ஆகியவற்றால் படித்து முடித்த உடனேயே வேலை தேட ஆரம்பித்திருக்கிறார். திருச்சியில் இருந்து வேலைக்காக சென்னைக்கு வந்த இவர் தெருத்தெருவாக அலைந்து பொருட்களை விற்கும் வேலைதான் செய்திருக்கிறார். பூ, மூக்குத்தி, செருப்பு, டிரஸ்னு என் கிராமத்து தோற்றத்தைப் பார்த்துட்டு பலரும் இவரை கிண்டல் செய்து உள்ளார்களாம்.

Advertisement