அது சரியா வராதுங்கறதால தான் ரஜினிய பொன்னாயின் செல்வன்ல நடிக்க வைக்கல – மணிரத்னம் சொன்ன பதில்.

0
411
maniratnam
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் மணிரத்தினம். இவரின் நீண்ட நாள் கனவுப்படமே ‘பொன்னியின் செல்வன்’.` பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதை தற்போது திரைப்படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். இதை படமாக்கப் பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள்.ஆனால், அதை மணிரத்னம் தான் சாதித்து காட்டி இருக்கிறார். பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது.மீபத்தில் தான் பொன்னியின் செல்வன் படத்தின் பாடல்கள் வெளியாகி இருந்தது. மேலும், சில தினங்களுக்கு முன் தான் பிரம்மாண்டமாக படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து முடிந்தது. இதில் ரஜினிகாந்த், கமலஹாசன் உட்பட பலரும் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்கள்.

- Advertisement -

பொன்னியின் செல்வன் குறித்து ரஜினி :

இந்த நிலையில் விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கூறியிருந்தது, எனக்கு நிறைய புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் இருந்தது. ஆனால், நான் பக்க எண்கள் பார்த்து தான் படிக்க தொடங்குவேன். 200 – 300 வரை இருந்தால் சரி என்று படிப்பேன். ஆனால், 500க்கு மேலே போனால் அதை வாசிக்கவே மாட்டேன். பொன்னியின் செல்வன் மொத்தமாக ஐந்து பாகமும் 2000 பக்கம் என்று கூறினார்கள் அட போங்கடா என்று சொல்லிவிட்டேன்.

வந்திய தேவனாக ரஜினி :

அப்போது ஒரு பத்திரிக்கைக்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அளித்த பேட்டியில் பொன்னியின் செல்வன் கதையில் வந்தியதேவன் கதாபாத்திரத்திற்கு யார் சரியாக இருப்பார்? என்று கேட்டதற்கு ரஜினி சரியாக இருப்பார் என்று சொன்னார். அப்போதே பொன்னியின் செல்வன் கதையை படிக்கணும் என்று முடிவு செய்தேன். அந்த நாவலை படிக்க படிக்க அவ்வளோ அற்புதமாக இருந்தது. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகாக கல்கி வடிவமைத்து இருந்தார்.

-விளம்பரம்-

ரஜினி கேட்டும் நடிக்க வைக்காதது ஏன் :

மேலும், நாவலை வாசிக்கும் போதே என்னை நான் வந்திய தேவனாகவும், கமலை அருள்மொழி வர்மனாகவும், ஆதித்ய கரிகாலன் விஜயகாந்த் ஆகவும், பெரிய பழுவேட்டையர் ஆக சத்தியராஜையும் கற்பனை செய்து படித்தேன் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மணிரத்னத்திடம் ரஜினிகாந்த் கேட்டும் அவரை நீங்க நடிக்க வைக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

மணிரத்னம் சொன்ன பதில் :

இதற்கு பதில் அளித்த மணிரத்னம் ”நான் நல்லாயிருக்கறது பிடிக்கலையா உங்களுக்கு? அவர் ரசிகர்கள் எல்லாம் என்னைஎன்ன பண்ணுவாங்க?. அவர் நடிச்சா, கதையை மாத்தணும். அப்புறம் கல்கி ரசிகர்கள்கிட்ட மாட்டணும். அது சரியா வராதுங்கறதால, அவரை நடிக்க வைக்கவில்லை’ என்று கூறியுள்ளார்.

Advertisement