பாகுபலி மாதிரி பொன்னியின் செல்வன்ல அது இல்ல, இது ரியாலிட்டி – மணிரத்னம் கொடுத்த நச் விளக்கம். வீடியோ இதோ.

0
334
- Advertisement -

பொன்னியின் செல்வன்- பாகுபலி ஒப்பீடு குறித்து மணிரத்தினம் அளித்திருக்கும் பேட்டி வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. 70 ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை தற்போது இயக்குநர் மணிரத்னம் இயக்கி சாதித்து காட்டி இருக்கிறார். பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்கள்.

- Advertisement -

பொன்னியின் செல்வன் படம் விமர்சனம்:

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த பொன்னியின் செல்வன் படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. நாவலை படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவரையுமே சந்தோசப்படுத்தும் வகையில் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர். தமிழ் சினிமாவின் பெருமையை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு சென்று விட்டார் என்று சொல்லலாம். மேலும், தமிழ் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் உலக சினிமா ரசிகர்களும் பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் vs பாகுபலி:

பிரபலங்கள் பலரும் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இன்னொரு பக்கம், பொன்னியின் செல்வன் படத்தையும் பாகுபலி படத்தையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள். இந்நிலையில் இது குறித்து மணிரத்தினம் அவர்களிடம் பேட்டி எடுக்கப்பட்ட போது அவர் கூறியிருந்தது, பொன்னியின் செல்வன் படம் ஒரு உண்மை கதை.

-விளம்பரம்-

மணிரத்தினம் அளித்த பேட்டி:

ராஜராஜ சோழன் வாழ்ந்த கதை. அதை தான் கல்கி அவர்கள் எழுதியிருந்தார். அதை தான் நாங்கள் இயக்கி இருக்கிறோம். பாகுபலி என்பது ஒரு பேண்டசிக் படம். சூப்பர் ஹீரோ கதை. அதற்கும் பொன்னியின் செல்வன் படத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இதில் அந்த விதமான சூப்பர் ஹீரோ எல்லாம் யாரும் இல்லை.

பாகுபலி குறித்து சொன்னது:

படம் முழுவதும் வந்திய தேவன் மூலமாக பார்க்கிறோம். வந்திய தேவன் நம்மை போல் சாதாரண ஒரு மனிதர். அதனால் பொன்னியின் செல்வன் என்பது ஒரு உண்மை கதை. பாகுபலி ஒரு ஃபேண்டஸிக் படம் என்று கூறி இருக்கிறார். இப்படி இவர் அளித்திருக்கும் பேட்டி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement