எப்படி நீ என் பெயரை சொல்லி கூப்பிடலாம், கோபப்பட்டுள்ள தேவையாணிக்கு பாடம் புகட்டியுள்ள மணிவண்ணன். வீடியோ இதோ.

0
794
devaiyani
- Advertisement -

சினிமா உலகில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் தேவயானி. இவர் மும்பையை சேர்ந்தவர். இவருடைய இயற்பெயர் சுஷ்மா . 1993 ஆம் ஆண்டு சினிமாவில் இவர் அறிமுகமாகி தற்போது வரை நடித்து கொண்டு இருக்கிறார். தமிழ் சினிமாவில் உள்ள விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து புகழ்பெற்றவர் நடிகை தேவயானி. மேலும், இவர் தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு தேவயானி அவர்கள் சினிமா உலகில் இந்த அளவிற்கு பிரபலமாக இருப்பதற்கு காரணம் இயக்குனர் ராஜகுமாரன் தான். பின் தேவயானியும், இயக்குநர் ராஜகுமாரனும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

-விளம்பரம்-

இவர்களுக்கு இனியா, பிரியங்கா என்ற இரண்டு மகள்கள் உள்ளார்கள். தற்போதும் தேவையானி பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், படங்களை தவிர இவர் தொடர்களிலும் நடித்து வருகிறார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் புது புது அர்த்தங்கள் என்ற தொடரில் லட்சுமி என்ற கேரக்டரில் நடிகை தேவயானி, ஹரி கிருஷ்ணண் என்ற கேரக்டரில் அபிஷேக் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தேவயானி பற்றி பலரும் தெரிந்திராத சில விஷயத்தை இயக்குனர் களஞ்சியம் சமீபத்தில் பேட்டி ஒன்று கூறி இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது,

- Advertisement -

இயக்குனர் களஞ்சியம் அளித்த பேட்டி:

தேவயானியை வைத்து படம் பண்ணிட்டு இருக்கும்போது போட்டோ ஸ்டில் எடுக்கும் பூபதி, தேவயானி இங்க திரும்புங்கள் என்று சொல்லிவிட்டார். உடனே, தேவயானி நீங்கள் எப்படி என்னைதேவயானி என்று கூப்பிடலாம்? என்று கோபப்பட்டார். பின் இயக்குனர், கேமராமேன் தவிர என்னை யாரும் தேவையானி என்று கூப்பிடக்கூடாது. ஆப்ட்ர் ஆல் நீ ஒரு ஸ்டில் போட்டோகிராஃபர் மட்டும் தான். ஒழுங்கா என்னை மேடம்னு கூப்பிடுங்கள். முதலில் சொன்னதற்கு நீ மன்னிப்பு கேளு என்று தேவயானி சொல்லிவிட்டார். அந்த சமயம் பார்த்து மன்னிப்பு கேட்க கூடாது என்று படக்குழுவினர் பாதிப் பேர் வந்து செல்கிறார்கள். எல்லோருமே என்னுடைய நண்பர்கள்தான். எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

தேவையானி மன்னிப்பு கேட்க சொன்ன காரணம்:

மேலும், மன்னிப்பு கேட்க முடியாது என்று எல்லோரும் உட்கார்ந்து இருக்கிறோம். முரளி சார் போயி தேவயானியை சமாதானப்படுத்துகிறார். ஆனாலும், தேவயானி சமாதானமாகவில்லை. இந்த பிரச்சனை அப்போது பத்திரிகையில் எல்லாம் பிரபலமாக பேசப்பட்டு இருந்தது. இந்த மாதிரி சமயத்தில் தான் பத்து நாள் கழித்து மணிவண்ணன் சார் சூட்டிங்குக்கு வந்திருந்தார். வந்தவுடனே மணிவண்ணன் சார், எங்க இருக்கிறாங்க அந்த பொண்ணு, அவங்கள வர சொல்லுங்க என்று சொன்னார். இந்த தேவயானி வந்தவுடனே மணிவண்ணன் சார் கேட்ட முதல் வார்த்தையே எதுக்குமா பெயர் வைக்கிறார்கள்? பெயர் வைப்பதே கூப்பிடுவதற்கு தானே?

வீடியோவில் 8 நிமிடத்தில் பார்க்கவும் :

-விளம்பரம்-

தேவையானியை திட்டிய மணிவண்ணன்:

இவங்களெல்லாம் கூப்பிடனும், கூப்பிடக் கூடாது என்று பெயர் வைப்பார்களா? எல்லோருமே மணிவண்ணன் சார் இங்க வாங்க, போங்க, மணிவண்ணன் பாரா போறான் அப்படின்னு சொல்லும் போது நான் அவர்கள் எல்லாம் கூப்பிட்டு மன்னிப்பு கேட்க முடியுமா? பெயர் வைப்பது கூப்பிடுவதற்கு தான். உன் பெயரை 4 பேர் சொல்லணும், நாலு பேருக்கு உன் பெயர் தெரியணும். அதனால் நீ நடந்து கொண்டதற்கு நீதான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார். இது தேவயானி மனதில் தெளிவை ஏற்படுத்தியது. பின் சூட்டிங் ஸ்பாட்டில் ஆல்பம் ரெடி ஆனதும் அதை எல்லோருமே பார்த்துக் கொண்டிருந்தோம். தேவயானி அந்த ஆல்பத்தை பார்த்தவுடன் மிரண்டு போய் விட்டார்கள். பின் பூபதியை பார்த்து தேவயானி என்னை மன்னித்து விடுங்கள்.

மன்னிப்பு கேட்ட தேவையானி:

உங்கள் திறமையை புரிந்து கொள்ளாமல் நான் உங்களை தவறாக பேசிவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள். இதை மணிவண்ணன் சார் எனக்கு புரிய வைத்து விட்டார் என்று சொன்னார் என்று கூறியிருந்தார். இப்படி இயக்குனர் களஞ்சியம் கூறியிருக்கும் விஷயம் தற்போது சோசியல் மீடியவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக இருந்தவர் களஞ்சியம். இவர் முரளி, தேவயானி வைத்து பூமணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி அடைந்து இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர் பல படங்களை இயக்கியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் நடிகராகவும் நடித்திருக்கிறார்.

Advertisement