தமிழ் சினிமாவில் பல்வேறு மலையாள நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவிடுகின்றனர். அந்த வகையில் தனது முதல் படத்திலேயே ரசிங்கர்களை சுண்டி இழுத்தவர் நடிகை மஞ்சிமா மோகன். 1998 களில் மலையாள சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர்.பின்னர் 2016 ஆம் ஆண்டு கவுதம் வாசுதேவன் இயகத்தில் வெளியான அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
அதோடு மஞ்சிமா மோகன் தந்தை ஒரு திரைப்பட ஒளிப்பதிவாளர் மற்றும் தாயார் ஒரு நடன கலைஞர் ஆவார். அதுமட்டும் இல்லைங்க மஞ்சிமா மோகன் அவர்களுக்கு நடிப்பின் மீது அதிக ஆர்வமுடையவர். அதோடு குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நம்ம மஞ்சுமா மோகன் அவர்கள் பிரசாத் இயக்கத்தில் சீனிவாசனின் திரைக்கதையில் “ஒரு வடக்கன் செல்பி” என்ற மலையாள படத்தில் முதன் முறையாக கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படம் வெளியானதை தொடர்ந்துதான் மஞ்சுமா மோகனுக்கு தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் மூலம் மஞ்சுமா மோகன் அவர்கள் தமிழ் ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கட்டி இழுத்தார். தன்னுடைய முதல் படத்திலேயே பெரிய அளவு வரவேற்பை பெற்றார். ஆனால், அதற்குப் பின்னர் தமிழில் சில படங்களில் நடித்தார். தமிழில் நடிகை மஞ்சு மோகன் சத்திரியன், இப்படை வெல்லும், தேவராட்டம் என வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார். சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படத்தை தவிர மற்ற படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை, எனினும் இவரிடம் கைவசம் தற்போது நான்கு படங்கள் உள்ளன. தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
சமீபத்தில் நடிகை மஞ்சிமா நீச்சல் குளத்தில் குளிப்பது போல ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனை கண்ட பலரும் மஞ்சுமா இது என்று ஷாக்கடைந்துள்ளனர். ஒரு சிலரோ மஞ்சிமாவை முழுதாக நீச்சல் உடையில் பார்க்க முடியவில்லையே என்று வருத்தத்தில் உள்ளனர்.