காதலிக்க கட்டாயப் படுத்தினார் – இயக்குனர் மீது அசுரன் பட நடிகை புகார். அதுவும் யார் பாருங்க.

0
444
manju
- Advertisement -

காதலிக்க சொல்லி கட்டாயப் படுத்தினார் என்று இயக்குனர் மீது மஞ்சு வாரியர் கொடுத்த புகார் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்து இருந்த ‘அசுரன் ‘ படம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மஞ்சு வாரியார். இந்த படம் அமோக வெற்றி பெற்று இருந்தது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் மலையாள நடிகை மஞ்சு வாரியார். இவர் தமிழில் பரிட்சியமான நடிகை இல்லை என்றாலும், மலையாள திரைப்பட உலகில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் இவரை மலையாள திரை உலகில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று தான் அழைப்பார்கள். ஆரம்பத்தில் நடிகை மஞ்சு வாரியர் அவர்கள் விளம்பரப் படங்களில் தான் நடித்து இருந்தார். அதற்கு பிறகு மலையாளத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான ‘சாக்ஷியம்’ என்ற படம் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். அதன் பின்னர் மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நடிகர் திலிப்பின் முன்னாள் மனைவி மஞ்சுவாரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பிரபல இயக்குனர் சணல் குமார் பதிவிட்ட பதிவு:

தற்போது மஞ்சு வாரியர் பிசியாக படங்களில் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் நடிகை மஞ்சு வாரியரை காணவில்லை என்று பிரபல இயக்குனர் பதிவிட்டிருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. பிரபல மலையாள இயக்குனரான சணல் குமார் அவர்கள் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறி இருப்பது, நடிகை மஞ்சு வாரியர் அவர்கள் கந்துவட்டிக்காரர்கள் சிலரின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். அவரது உயிருக்கு ஆபத்து இருக்கிறது. இதுகுறித்து சோசியல் மீடியாவில் நான் பதிவிட்டு 4 நாட்கள் ஆகிறது. ஆனால், இதுவரை மஞ்சு வாரியரோ, அவருக்கு நெருக்கமானவர்களோ இதுகுறித்து எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை. நடிகை மஞ்சு வாரியரின் மௌனம் இன்னும் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

மஞ்சு வாரியார் உயிருக்கு ஆபத்து:

மலையாள திரையுலகில் பாலின சமத்துவத்திற்காக செயல்படும் Women in Cinema Collective என்கிற அமைப்பிற்கும் நான் மின்னஞ்சல் அனுப்பினேன். அவர்களும் இந்த விவகாரத்தில் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றனர். மிகத் தீவிரமான இந்த பிரச்சனையை பலரும் நகைச்சுவையாகப் பார்க்கின்றனர். கேரள ஊடகங்கள் இவ்விவகாரத்தை கண்டு கொள்ளாதது போல் நடிப்பது பயமாக இருக்கிறது. ஊடகங்கள் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். இதற்கு மேல் என்னால் எதையும் செய்ய முடியாது என்ற வேதனை அளிக்கிறது. குறைந்தபட்சம் உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடாது என நான் பிரார்த்தனை செய்கிறேன் என்று அந்த பதிவில் கூறி இருந்தார்.

-விளம்பரம்-

சனல்குமார் சசிதரன் மீது புகார்:

இப்படி சனல் குமார் பதிவிட்ட பதிவு சமூக வலைத்தளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. மேலும், இது தொடர்பாக மஞ்சுவாரியர் எங்கே என்ற கேள்வியும்? எழுந்தது. இந்த நிலையில் நடிகை மஞ்சுவாரியர் போலீசில் புகார் அளித்து இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகை மஞ்சுவாரியர் கொச்சி போலீஸ் கமிஷனரை சந்தித்து ஒரு புகார் கொடுத்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, இயக்குனர் சனல்குமார் சசிதரன் தன் மீது அவதூறு பரப்பி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இப்படி இவர் அளித்த புகாரின் அடிப்படையில் எர்ணாகுளம் போலீசார் இயக்குனர் சனல்குமார் சசிதரனை கைது செய்திருக்கின்றது.

மஞ்சு வாரியர் அளித்த புகார்:

அதுமட்டுமில்லாமல் சனல்குமார் சசிதரன் மீது நடிகை மஞ்சு வாரியர் அளித்த புகார் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அந்த அந்த புகாரில் மஞ்சு வாரியர் கூறியிருப்பது, சனல்குமார் சசிதரன் இயக்கிய கயட்டம் படத்தின் படப்பிடிப்பின் போது அவரே என்னை காதலிப்பதாகக் கூறினார். அதனை ஏற்க மறுத்து விட்டேன். அதன்பிறகும் அவர் என்னை காதலிப்பதாக தொலைபேசியில் கூறி இருந்தார். அதனையும் நான் கடுமையாக கண்டித்து மறுத்தேன். அதன்பின் அவர் விடாமல் தன்னை காதலிக்க வலியுறுத்தி சமூக வலைத்தளம் மூலம் கருத்து பதிவிட்டு வந்தார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே நான் அவரது பதிவுகளை கண்டு கொள்ளாமல் இருந்தேன். அதன் பிறகும் அவர் என்னைத் தொந்தரவு செய்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

Advertisement