இளையராஜா எச்சரித்தால் சினிமாவில் இந்த விஷயத்தையே விட்டுள்ள மனோ – அவரே சொன்ன விஷயம்.

0
667
mano
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் மிர்ச்சி சிவா. இவரை அவருடைய ரசிகர்கள் ‘அகில உலக சூப்பர் ஸ்டார்’ என்று தான் செல்லமாக அழைக்கிறார்கள். இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன் ரேடியோ மிர்ச்சியில் வானொலி அறிவிப்பாளராக பணியாற்றினார். அதன் பின்னர் சென்னை வந்து சின்ன சின்ன நாடகங்களில் கலந்து கொண்டு தனது நடிப்பு திறமையை வளர்த்தி கொண்டார். மேலும், சிவா இந்த ரேடியோ ஜாக்கி வேலையை பார்த்துக் கொண்டே படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தார்.

-விளம்பரம்-

பின் 2001 ஆம் ஆண்டு ஷாம் நடிப்பில் வெளிவந்த 12B என்ற படத்தின் மூலம் தான் சிவா சினிமா உலகிற்கு அறிமுகமானார்.அதன் பின்னர் விசில் என்ற படத்தில் நடித்தார். இந்த படங்களில் இவருக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் தனது ரேடியோ ஜாக்கி வேலைக்கு சென்று விட்டார். பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 600028 என்ற படத்தின் மூலம் தான் சிவா மக்கள் மத்தியில் பிரபலமானர். இதனை தொடர்ந்து மிர்ச்சி சிவா பல படங்களில் நடித்தார்.

- Advertisement -

சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் :

தற்போது மிர்ச்சி சிவா இயக்குனர் விக்கெஷ் ஷா இயக்கத்தில் லார்க் ஸ்டூடியோஸ் பெயரில் கே.குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள “சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார். ஆர்தர் ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்நிலையில் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் நாளை வெளியாகவுள்ளது.

பாடகர் மனோ :

மேலும் இப்படத்தில் மிர்ச்சி சிவா, அஞ்சு சூரியன், மேகா ஆகாஷ் மற்றும் பின்னணி பாடகர் மனோ போன்றவர்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் பாடகர் மனோ அவர்களும் கலந்து கொண்டார். மானே இந்த படத்தில் சிவாவின் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்க்கு முன்னர் பல நிகழ்ச்சிகளில் பாடகர் மனோ கலந்து கொண்டிருந்தாலும் நடித்த படங்களை பொறுத்தவரையில் பெரிதாக நடிக்கவில்லை. அதற்கு காரணம் இளையராஜா என கூறப்படுகிறது.

-விளம்பரம்-

செய்தியாளர்கள் சந்திப்பு :

அதாவது கமலஹாசன் நடித்த “சிங்காரவேலன்” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாடகர் மனோ நடித்திருப்பார். ஆனால் அந்த திரைப்படத்திற்கு பிறகு பெரிதாக நடிக்கவில்லை. இந்நிலையில் “சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்” படத்தின் செய்தியாளர் சந்திப்பில் இது பற்றி கேட்கப்பட்டது. அதாவது “சிங்காரவேலன்” திரைப்படத்திற்கு பிறகு பாடகர் மனோ ஏன் திரைப்படங்ககளில் நடிக்கவில்லை, இளையராஜா நடிக்க வேண்டாம் என தடுத்து விட்டாரா? அல்லது வாய்ப்புகள் தவறும் என கூறினாரா? என்று அவரிடம் பிரபல ஊடகம் கேள்வி எழுப்பியது.

படங்களில் நடிக்காததற்கு காரணம் :

அதற்கு பதிலளித்த பாடகர் மனோ கூறுகையில் “நீங்கள் நடிக்க சென்றால் உங்களுக்காக பாடல்கள் காத்திருக்காது என இளையராஜா கூறினார். ஏனெற்றால நான் “சிங்காரவேலன்” படத்தின் படப்பிடிப்பில் இருந்த போது நான் பாடிக்கொடுக்க வேண்டிய பாடல்கள் இருந்தது. ஆனால் 15க்கும் மேற்பட்ட பாடல்களை நான் படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் பிறகுதான் பாடி கொடுத்தேன். அப்போதுதான் இளையராஜா இதனை தெரிவித்தார் அது எனக்கு கொடுத்த மிகப்பெரிய எச்சரிக்கையாக நான் எடுத்துக்கொண்டேன் என தெரிவித்தார் பாடகர் மனோ.

Advertisement