நானும் லோகேஷும் காதல் கோட்டை அஜித் – தேவயானி மாதிரி – மன்சூர் அலிகான் சொன்ன விஷயம்.

0
326
Lokesh
- Advertisement -

நானும் லோகேஷும் காதல் கோட்டை அஜித் – தேவயானி மாதிரி என்று மன்சூர் அலிகான் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. தற்போது கோலிவுட்டில் மோஸ்ட் வான்டட் இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து இருந்த படம் விக்ரம்.

-விளம்பரம்-

இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் கமலின் விக்ரம் படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருப்பதால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி இருக்கிறார்கள்.

- Advertisement -

விக்ரம் திரைப்படம்:

மேலும், இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு கமலின் படத்திற்கு வரவேற்பு கிடைத்து இருக்கிறது. மேலும், விக்ரம் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் லோகேஷ் கனகராஜ் அவர்கள் பல பேட்டி கொடுத்து இருக்கிறார். அந்த வகையில் ஒரு பேட்டியில் லோகேஷ் கனகராஜ் இடம் மன்சூரலிகான் குறித்து கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. அதற்கு லோகேஷ் கனகராஜ் , கைதி படத்தில் அவரை நடிக்க வைக்கலாம் என்று தான் இருந்தோம். ஏன்னா, எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். அவருடைய ஆட்டிடியூட் ரொம்ப பிடிக்கும்.

மன்சூர் அலிகான் குறித்து லோகேஷ் சொன்னது:

அவருடைய இன்டர்வியூ வீடியோ ஒன்று பார்த்தேன். ஆங்கர் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். ஆனால், இவர் ஒரு மரத்திலிருந்து இலையைப் பறித்து பிபி ஊதி இருந்தார். நிஜமாகவே யாரும் இந்த மாதிரி பண்ணி இருக்கவே மாட்டார்கள். அதை பார்த்து நான் வியந்து விட்டேன். எப்படியாவது அவரை படத்தில் கொண்டு வரவேண்டும் என்று நினைத்தேன் என்று கூறியிருந்தார். அதோடு மாநகரம் படத்திற்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்தில் முதன் முதலில் மன்சூர் அலிகான் தான் நடிப்பதாக இருந்தது. அவரை மனதில் வைத்து தான் லோகேஷ் ‘கைதி’ படத்தின் கதையையே எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

மன்சூர் அலிகான் அளித்த பேட்டி:

இப்படி லோகேஷ் கனகராஜ் மன்சூர் அலிகான் குறித்து கூறியதில் இருந்தே அவரைப் பற்றிய வீடியோக்களும், மீம்ஸ்களும் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்த நிலையில் மன்சூர் அலிகான் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் லோகேஷ் குறித்து கூறியிருந்தது, நானும் லோகேஷும் காதல் கோட்டை அஜித் – தேவயானி போல் இதுவரை நேரில் சந்தித்தது கிடையாது. எனக்கும் மண்டைய போடுவதற்குள் பெரிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று இருக்கிறது. லோகேஷ் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.

மன்சூர் அலிகான் குறித்த தகவல்:

இப்படி மன்சூர் அலிகான் கூறியதன் மூலம் விரைவில் லோகேஷ் இயக்கம் படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான வில்லனாக திகழ்ந்தவர் மன்சூர் அலிகான். இவர் வில்லனாக மட்டும் இல்லாமல் சமீப காலமாகவே காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இவர் சினிமா உலகில் நுழைந்த ஆரம்பத்தில் ரஜினி, விஜயகாந்த், கமல், விஜய் போன்று பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து இருக்கிறார்.

Advertisement