மீனாட்சி அம்மன் தூண்கள் போன்று இருக்கும் கால்கள் மெலிந்ததேனோ மன்னவனே – கேப்டன் உடல் நலம் குறித்து மன்சூர் வெளியிட்ட உருக்கமான அறிக்கை.

0
483
- Advertisement -

விஜயகாந்தின் உடல்நிலை குறித்து அவரது மனைவி பிரேமலதா, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் ரஜினி, கமலுக்கு இணையாக இருந்த விஜயகாந்த் உடல் நல குறைவின் காரணமாக சில ஆண்டுகளாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது கட்சியை அவருடைய மனைவி மற்றும் மகன்கள் தான் பார்த்து கொண்டு வருகின்றனர். மேலும், கட்சியின் வளர்ச்சிக்கு நேரடியாக மக்களை சந்தித்து செயல்படவில்லை என்றாலும் விஜயகாந்த் அவ்வப்போது தொண்டர்களை சந்தித்து உற்சாகப்படுத்தி வருகிறார்.

-விளம்பரம்-

தற்போது தொடர் சிகிச்சை எல்லோரும் விஜயகாந்த் அவ்வப்போது மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்று வருகிறார் அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் விஜயகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட இருப்பதாக தேமுதிக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த வகையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியா மருத்துவமனையில் விஜயகாந்த்திற்கு கடந்த சில நாட்களாக நாளாக சிகிச்சை தொடர்ந்து வருகிறது.

- Advertisement -

மேலும், இது வழக்கமான பரிசோதனை தான் என்றும் விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் தே.மு.தி.க சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. இருப்பினும் விஜயகாந்த் வீடு திரும்பாமல் தொடர்ந்து மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இப்படி ஒரு நிலையில் விஜயகாந்தின் உடல் நிலையில் தொடர்பாக மியாட் மருத்துவமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் ‘ விஜயகாந்த் சளி அதிகமாக உள்ளதால் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இருப்பதாகவும் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

இப்படி ஒரு நிலையில் ‘விஜயகாந்த் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது” என தெரிவித்து இருந்தது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் விஜயகாந்த் உடல்நலம் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘அண்ணே! தாங்களுக்கு ஏன் இந்த சோதனை.? உங்கள் மன்சூரலிகான் அழுகிறேன். நன்றாகி வாங்கண்ணே!! கேப்டன் நடனக்காரனான என்னை நாடறியச்செய்த திருமலை நாயக்க நாயகனே! எதிர்நாயகனை அடிக்கவே விடாது, பில்டப் செய்தும் டூப் போட்டும் சூப்பர்மேனாய் கதாநாயகர்கள் வலம் வந்த காலத்தில், திருப்பி அடி, பறந்து அடி, என தாங்களை உதைக்க வைத்து, திருப்பி காற்றிலே பறந்து ஒரு கழுதை உதை உதைப்பீர்களே! அண்ணே! இனி எப்ப வந்து உதைப்பீர்கள்?

மதுரை மீனாட்சி அம்மன் தூண்கள் போன்று இருக்கும் கால்கள் மெலிந்ததேனோ மன்னவனே! நாயகிகளை, துரத்த வைத்து, கடத்த வைத்து, சில்மிஷம் செய்ய வைத்து. ஓடி. ஆடி … உழைப்பை பிழிய வைத்தவனே! சாப்பிடுகிற சோறு உடம்பில் ஒட்ட வைத்தவனே! நீவீர் வாழ்வீர் நூறாண்டு.யாரோ தவறாக வீடியோவை கட் செய்து அனுப்பிவிட்டனர் கடவுளிடம். தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இங்குளர் நிறைய. கருப்பு எம்.ஜி.ஆரே. ஆயிரக்கணக்கானரை வாழவைத்த ஆலவிருட்சமே! மக்களோடுதான் கூட்டணி என்றாய் ! மகராசி அம்மாவுடன் கூட்டணி வைத்து எதிர்கட்சி தலைவரானாய் ! மகராசியை மரணிக்கச் செய்துவிட்டனர்.

எங்கள் மாநகர காவலனை, பூந்தோட்ட காவல்காரனை. வேதனைக்கு உள்ளாக்காதீர் இறைவா. இன்னல்களை இலகுவாக்கு !! கேப்டனை மருத்துவத்தில் மீட்டு புரட்சிக் கலைஞராய் ஒப்படை! நண்பன் ராவுத்தருக்காக தர்கா சென்றவரை, அவரின் ரசிக, ரசிகையர் பக்தர்களுக்காக பத்திரமாக தா …100வது படம் எந்த நாயகர்களுக்கும் ஓடியதில்லை: தாங்களது 100வது படத்தில் முதல் வாய்ப்பளித்து வெற்றி திருமகளை மாலையிட வைத்த பிரபாகரனே…வாழிய வாழிய நூறாண்டு ‘!! தாங்களிடம் அடிவாங்க காத்திருக்கும் தம்பி மன்சூரலிகான்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Advertisement