மன்சூர்-திரிஷா விவகாரம், சொன்னதை செய்து காட்டிய குஷ்பூ. மன்சூர் மீது பாய்ந்த வழக்கு.

0
225
- Advertisement -

மன்சூர் அலிகான் விஷயத்தில் மகளீர் ஆணையத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வைத்து இருக்கிறார் குஷ்பூ. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மன்சூர் அலிகான், இந்த படத்தில் நடித்த திரிஷா குறித்து பேசும் போது ‘இப்போதெல்லாம் பலாத்கார காட்சிகளை வைப்பது இல்லை. நானும் திரிஷா இருக்கிறார்.. லியோவில் அவரை கட்டிலில் தூக்கி போடலாம்.. அப்படி ஒரு காட்சி இருக்கும் என்றெல்லாம் நினைத்தேன். குஷ்பு.. ரோஜாவை எல்லாம் அப்படி செய்துள்ளேன். ஆனால் இங்கே அப்படி காட்சி இல்லை.

-விளம்பரம்-

எனக்கு வில்லன் ரோல் கொடுப்பது இல்லாது. இப்போதெல்லாம் பலாத்கார காட்சிகளை வைப்பது இல்லை என்று ‘ என்று கூறி இருந்தார். மன்சூர் அலிகானின் இந்த பேச்சால் கடுப்பான திரிஷா ‘நடிகர் மன்சூர் அலிகான் என்னைப் பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோவைப் பார்த்தேன். அவரது பேச்சை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.. அந்த பேச்சு ஆணாதிக்க மனநிலையிலும், மரியாதைக் குறைவானதாகவும், பாலின பாகுபாட்டைப் பிரதிபலிக்கக் கூடிய மோசமான ஒன்றாகவும் இருந்தது.

- Advertisement -

என்னுடன் நடிக்க வேண்டும் என அவர் தொடர்ந்து ஆசைப்படட்டும். ஆனால், இத்தகைய கேவலமான மனிதருடன் இணைந்து நடிக்காததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய வாழ்நாளில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்பது உறுதி. அவரைப் போன்றவர்களால் ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கே இழுக்கு’ என்று படு ஆவேசமாக பதிவிட்டு இருக்கிறார். மன்சூர் அலிகானின் இந்த பேச்சுக்கு பல்வேறு பிரபலங்கள் தங்கள் கண்டனத்தை கூறி வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த அவர், பழைய படங்கள் மாதிரி கதாநாயகிகள் கூட நடிக்க வாய்ப்பு இதுக்கா இல்ல என்கிற ஆதங்கத்தை காமெடியா சொல்லி இருப்பேன். அத கட் பண்ணி போட்டு கலகம் பண்ண நெனச்சா நான் என்ன இந்த சலசலப்புகளுக்கு அஞ்சரவனா. திரிஷா கிட்ட தப்பா வீடியோவ காட்டிருக்காங்க. நான் சக நடிகைகளுக்கு மரியாதை கொடுப்பவன்னு எல்லாருக்கும் தெரியும். சில சொம்பு தூக்கிக்ளோட பருப்பெல்லாம் என்கிட்ட வேகாது. உலகத்திலே எத்தனையோ பிரச்சனை இருக்கு, பொழப்ப பாருங்கப்பா நன்றி என்று கூறி இருந்தார்

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் மன்சூர் அலிகான் எதிராக கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கும் நடிகர் சங்கம் மன்சூர் அலிகான் இந்த செயலை வன்மையாக கண்டித்ததோடு அவரது இந்த செயல் கோபத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவரது கருத்திற்கு மனம் வருதி உண்மையாக பொது மன்னிப்பு கூறும் வரை அவரை சங்கத்திலிருந்து ஏன் தற்காலிகமாக நீக்கம் செய்யக்கூடாது என்று தென்னிந்திய நடிகர் சங்கம் கருத்துவதாகவும் தெறிவித்து இருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து பேசிய குஷ்பூ ’இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக மன்சூர் அலிகான் பேசிய சர்ச்சை கருத்துகள் குறித்து ஆணையத்தின் மூத்த உறுப்பினர்களிடம் கூறியுள்ளேன். மன்சூர் அலிகான் மீது மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்’என கூறி இருந்தார். இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையமானது நடிகர் மன்சூர் அலிகான் மீது தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. சட்டப்பிரிவு 509 மற்றும் இது தொடர்பான இதர பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement