அவ்வளவு பெரிய கமலஹாசனே அந்த பெண்ணிற்கு போலீசிடம் எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லி கொடுப்பார் – பாபநாசம் படம் குறித்து மாரி செல்வராஜ்.

0
2536
- Advertisement -

மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தேவர் மகன் படம் குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் பேசிய கருத்திற்கு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் குவிந்து வரும் நிலையில் தற்போது மாரி செல்வராஜ் கமலின் பாபநாசம் படம் குறித்தும் பேசி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. தமிழில் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ் அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷை வைத்து ‘கர்ணன்’ படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

கர்ணன் படத்தை தொடர்ந்து தற்போது ‘மாமன்னன்’ படத்தை இயக்கி இருக்கிறார் மாரி செல்வராஜ். இத்திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினிற்கு கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இவர்களை தொடர்ந்து இந்த படத்தில் வைகை புயல் வடிவேலு , பகத் பாசில், லால் போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. மேலும், இந்த படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

- Advertisement -

மாமன்னன் இசை வெளியிட்டு விழா :

வருகிற ஜூன் 29ஆம் தேதி இந்த படம் திரையரங்கில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ லான்ச் விழா நடைபெற்றது. அதில், மாமன்னன் படக்குழு, கமலஹாசன், வெற்றிமாறன், சிவகார்த்திகேயன், சூரி, வினோத் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், இந்த விழாவிற்கு கமலஹாசன் தலைமை தாங்கினார் என்று சொல்லலாம். ஆனால், ரஜினி மட்டும் வரவில்லை. மேலும் விழாவில் மாரி செல்வராஜ் கூறியிருந்தது, தேவர்மகன் படத்தை பார்த்து தான் பரியேறும் பெருமாள், கர்ணன் படத்தை இயக்கினேன்.

மாரி செல்வராஜ் பேச்சு :

கமலஹாசனின் தேவர் மகன் படம் ஜாதி பெருமையை அப்பட்டமாக பேசி இருந்தது. மாமன்னன் உருவாவதற்கும் தேவர் மகன் படம் தான் காரணம். தேவர் மகன் பார்க்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி, அதிர்வுகள் என எல்லாமே இருக்கிறது. எல்லா இயக்குனர்களும் அந்த படத்தை பார்த்துவிட்டு படம் எடுப்பார்கள். தேவர்மகன் படம் எனக்கு ஒரு பெரிய மனப்பிறழ்வை உருவாக்கிய படம். நடப்பதெல்லாம் ரத்தமும் சதையுமாக இருந்தது. இதை எப்படி நான் புரிந்து கொள்வது.

-விளம்பரம்-

தேவர் மகன் குறித்து பேசிய மாரி செல்வராஜ் :

இந்த படம் சரியா தப்பா என்பதை புரிந்து கொள்ள முடியாத ஒரு வலி. தேவர் மகனில் இருக்கும் இசக்கி தான் மாமன்னன். அந்த இசக்கி மாமன்னனாக மாறினால் எப்படி இருக்கும் என்பது தான் மாமன்னன் படம் என்று கமலஹாசனை வம்பு இழுத்து இருக்கிறார்.ஆனால், கமலஹாசன் நிகழ்ச்சியில் அமைதியாக எதுவும் பேசாமல் சிரித்தபடியே மனதிற்குள் கோபத்தை வைத்துக்கொண்டு படத்தை பாராட்டி பேசி இருக்கிறார்.

பாபநாசம் குறித்து மாரி செல்வராஜ் :

அதோடு நீங்க எடுத்தா புரட்சிப்படம் மத்தவங்க எடுத்தா ஜாதிப்படமா ? என்றும் கமலின் ரசிகர்கள் கமண்ட் செய்து வருகின்றனர். தற்போது சோசியல் மீடியாவில் கமல் ரசிகர்களுக்கும் மாரி செல்வராஜ் ரசிகர்களுக்கும் இடையே பெரிய கலவரமே நடந்து கொண்டிருக்கின்றது. இப்படி இரு நிலையில் கமல் நடித்த பாபநாசம் படத்தையும் மாரி செல்வராஜ் விமர்சித்து இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

பாபநாசம் திரைப்படம் தமிழகத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. ஆனால், அந்த படத்தின் அந்த பெண்ணிடம் உன்னை வீடியோ கொடுத்தால் அவன் தானே வெட்கப்பட வேண்டும் என்று சொல்லமாட்டார். அப்போது இன்னொருவன் படம் இருந்தால் என்ன செய்வார் என்பது எனக்குத் தெரியவில்லை. அந்த படம் இங்கே ஓடியது. ஏன் ஓடியது என்றால் அந்த படத்தில் அந்த அச்சம் தான் முதலீடு அவ்வளவு பெரிய கமலஹாசனே அந்த பெண்ணிற்கு போலீசிடம் எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லி கொடுப்பார். ஆனால், எங்கேயும் வீடியோ எடுத்தால் பரவாயில்லை போடா மயிறு ஒரு சொல் என்று சொல்லவே மாட்டார். அதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

ரசிகர்களின் கருத்து :

இங்கே 250 பெண்களைக் வீடியோ எடுத்திருக்கிறார்கள் அதில் முதல் பெண் வீடியோ எடுத்தது நீதானடா நான் ஏன் வெட்கப்பட வேண்டும் என்று சொல்லியிருந்தால் 250 பெண்கள் காப்பாறப்பட்டு இருப்பார்கள் என்று கூறியுள்ளார். மாரி செல்வராஜின் இந்த வீடியோவை கண்டு பலர் பாராட்டினாலும், ஒரு மற்றும் ஒரு தரப்போ மாரி செல்வராஜ் பாபநாசம் படத்தை முழுமையாக பார்க்காமல் இப்படி பேசுகிறார். அந்த படத்தில் அந்த பெண் செய்த கொலையில் இருந்து தப்பிக்க வைக்கத்தான் அவர் முயற்சிப்பாரே தவிர எந்த இடத்திலும் அந்த பெண் தவறு செய்தது போல காட்டப்படவில்லை என்று கூறி வருகின்றனர்.

Advertisement