நீங்களே நான் பண்ணது தப்புன்னு மூனு தடவ சொல்றீங்க – கலப்பு திருமணம் செய்த சூப்பர் சிங்கர் சிறுமியின் அம்மா குறித்து மாரி செல்வராஜ்.

0
2438
- Advertisement -

சூப்பர் சிங்கர் ஜூனியரில் சிறுமியின் ஆசையை மாரி செல்வராஜ் நிறைவேற்றி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதிலும், விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் ஆணிவேராக மக்கள் எத்தனையோ பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சி பல ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் ஒளிபரப்பாகி வருகிறது. அதோடு இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. சொல்லப்போனால், இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலம் என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

- Advertisement -

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி:

சூப்பர் சிங்கர் சீனியர்ஸ் நிகழ்ச்சியை விட மழைலை குரல்கள் ஒலிக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் நிகழ்ச்சிக்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு பெற்று இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே தான் தொகுத்து வழங்கி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக ஸ்வேதா மோகன், பென்னி தயால், அனுராதா ஸ்ரீராம், சரண் மற்றும் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9 நிகழ்ச்சி:

சமீபத்தில் தான் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 9 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த சீசனில் அருணா வெற்றி பெற்று பட்டத்தை தட்டி சென்றிருந்தார். இதனை அடுத்து சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இது சிறுவர்களுக்கான நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு பிரபலம் வந்து நிகழ்ச்சியை சிறப்பித்து வருகின்றார்கள். இந்த நிலையில் இந்த வாரமும் ஒரு பிரபலம் நிகழ்ச்சியில் பங்கேற்றுகிறார்.

-விளம்பரம்-

சிறுமி செய்த செயல்:

அவர் வேறு யாரும் இல்லைங்க, நம்ப பிரபலமான இயக்குனர் மாரி செல்வராஜ் தான். நிகழ்ச்சி சிறுமி அஸ்வினி தனக்கு மாரி செல்வராஜ் ரொம்ப பிடிக்கும் என்று கூறி அவருடைய பாடலை ரொம்ப எமோஷனலாக ஃபீல் பண்ணி பாடியிருந்தார். அதுமட்டுமில்லாமல் சிறுமி அஸ்வினி இதுவரை பாடிய பாடல் எல்லாமே மாரி செல்வராஜ் பாடல்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. பின் அந்த சிறுமி அஸ்வினி அவர் பாடலை பாடி முடித்ததுமே இயக்குனர் மாரி செல்வராஜ் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

மாரி செல்வராஜ் என்ட்ரி:

பின் மாரி செல்வராஜை பார்த்த உடனே அந்த சிறுமி அஸ்வினி கண்கலங்கி அவருடைய காலில் விழுந்தார். உடனே அதை மாரி செல்வராஜ் தடுத்து நிறுத்தி அஸ்வினியை பாராட்டி பேசி இருந்தார். பின் அவர், சிறுமி அஸ்வினி அவருடைய மேடையை அவளே உருவாக்கி அதில் அவளே மகாராணியாய் நிற்கிறார். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்று எமோஷனலாக பேசியிருக்கிறார். மேலும், கலப்பு திருமணம் செய்த அஸ்வினி அம்மாவிற்கும் ஆறுதல் கூறி இருக்கிறார். மேலும், அவர்கள் பேசும்போது நான் செய்தது தப்பு தான் என்று மூன்று முறை சொன்னார் என்றும் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.

Advertisement