நாட்டாமை படத்தில் தாத்தா நான் பார்த்த என்ன வசனத்தை பேசிய சிறுவன் மாஸ்டர் மஹேந்திரனை நாம் கண்டிப்பாக மறந்திருக்க முடியாது . பல முன்னணி ஹீரோக்களின் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள இவர், இளையதளபதி விஜயுடன் ஒரு படத்தில் நடித்த போது சேட்டை செய்து விஜயுடன் மாட்டிக் கொண்டாராம்.
90 ஆம் ஆண்டு கால கட்டத்தில் சிறுவயது சிவாஜி போல நடிப்பில் அசத்திய மாஸ்டர் மஹேந்திரன். இதுவரை 120 படஙகளிக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். நாட்டாமை படத்தில் நடித்த பிறகு, 1995 ஆம் வெளியான “தாய் குலமே தாய் குலமே” என்ற படத்தில் நடித்து சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற விருதை பெற்றார்.
தற்போது 23 வயதாகவும் இவர் 2013 “விழா” என்ற படத்தில் கதாநாயகியகனாக நடித்துள்ளார்.மேலும் இவர் நடிகர் விஜயுடன் சிறு வயதில் “மின்சார கண்ணா” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். சமீபத்தில் அந்த படத்தில் விஜயுடன் நடித்த வேடிக்கையான அனுபவம் குறித்து பேட்டியளித்துள்ளார்.
அந்த படத்தின் ஒரு காட்சியில் சமயலறையில் அனைவரும் சமயல் பொருட்களை தூக்கி வீசி அமர்க்களம் செய்வது போல ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அந்த காட்சியில் மஹிந்திரன் விஜய் மீது முட்டையை எடுத்து வீசி இருப்பர். அந்த காட்சி முடிந்தவுடன் நடிகர் விஜய் மஹிந்திரனிடம் “வேண்டுமென்றே தானே என் மீது முட்டையை வீசினாய் ” என்று கிண்டலடித்துள்ளாராம்.