லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி இருந்தது.
மாஸ்டர் படத்தில் விஜய்யின் JD கதாபாத்திரத்தை விட விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரம் தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தது. பலரும் மாஸ்டர் படம் விஜய் படம் இல்லை விஜய் சேதுபதி படம் என்று கிண்டலடித்து வருகின்றனர். இந்த படத்தில் விஜய் சேதுபதியின் பல வசனங்கள் கைதட்டலை பெற்றது. அதிலும் குறிப்பாக ostrich பறவை முட்டை போடுவதோடுன் ஒப்பிட்டு விஜய் சேதுபதி சொன்ன வசனம் பல மீமாக வந்துகொண்டு இருக்கிறது.
இதையும் பாருங்க : மீண்டும் கதாநாயகியாக களமிறங்கும் வனிதா. நேரில் சென்று வாழ்த்திய விஜய் பட இயக்குனர். யார் தெரியுமா ?
அதே போல இந்த படத்தில் எத்தனையோ நடிகர் நடிகைகள் நடித்திருந்தாலும் அவர்களுக்கு ஒரு அழுத்தமான கதாபாத்திரம் இல்லை. அதே போல இந்த படத்தில் நடிகர் விஜய்க்கேன்றே சில சின்ன சின்ன விஷயங்களை படத்தில் புகுத்தி இருந்தார் லோகேஷ். இந்த படத்தில் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சிறை காவலர்களாக நடிகர் சாய் தீனா, மகாநதி சங்கர், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்து இருப்பார்கள்.
அந்த வகையில் புகைப்படத்தில் இருக்கும் இவரும் இந்த படத்தில் சிறை காவலராக நடித்து இருப்பார். இவரை யார் என்று அடையாளம் கண்டு கொள்வது கொஞ்சம் கடினம் தான். இவர் ஜீவா நடிப்பில் கடந்த 2011 ஆம் வெளியான ‘ரௌத்திரம்’ படத்தில் நடித்து இருப்பார். அந்த படத்தில் ஜீவாவின் மாப்பிள்ளையாக வரும் சத்யனை தெரியாமல் இடித்து பின்னர் அவரிடத்தில் வம்பிழுப்பார். பின்னர் இவரை ஜீவா தான் சமாதானம் செய்து அனுப்புவார். இப்படி 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடித்துள்ளது குறித்து ட்வீட் செய்துள்ளார்.