நுரை ததும்பும் தொட்டியில் குளியல், அருகிலேயே மது பாட்டில். மாஸ்டர் பட நடிகையின் சர்ச்சை புகைப்படம்.

0
1969
surekha
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகை சுரேகா வாணி. சினிமாவை பொறுத்த வரை முன்னணி நடிகர் நடிகைகளை விட துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தான் நிறைய படங்களில் நடிக்கின்றனர். அந்த வகையில் பல மொழி படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சுரேகா வாணி. இவர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர். இவர் முதன் முதலில் உத்தமபுத்திரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின் இவர் சீயான் விக்ரம் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த தெய்வத்திருமகள் படத்தில் எம் எஸ் பாஸ்கரின் மனைவியாக நடித்து தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1.png

இதனை தொடர்ந்து இவர் காதலில் சொதப்புவது எப்படி, பிரம்மா, எதிர் நீச்சல், மெர்சல், விஸ்வாசம் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்து உள்ளார். இவர் தமிழில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தெலுங்கில் 2005 ஆம் ஆண்டு முதல் தொடங்கி தற்போது வரை பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு தமிழ் மொழியை விட தெலுங்கு சினிமாவில் தான் அதிக வாய்ப்புகள் வருகிறது.

- Advertisement -

இதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமாகி வருகிறார். விஸ்வாசம் படத்தில் வில்லன் மனைவியாக நடித்த இவர், சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்திலும் நடித்து இருந்தார். ஆனால், இந்த படத்தில் இவர் நடித்த காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை. இருப்பினும் அமேசான் பிரைமில் வெளியான டெலீட்டட் வீடியோவில் இவர் நடித்த காட்சி பிரபலமானது.

This image has an empty alt attribute; its file name is surekavani.jpg

சினிமாவில் பெரும்பாலும் குடும்பப்பாங்கான வேடங்களில் மட்டுமே தோன்றும் இவர் நிஜ வாழ்வில் செம்ம மாடர்ன் பேர்வழியாக இருந்து வருகிறார். மேலும், இவருக்கு முடிந்து பள்ளி செல்லும் வயதில் இரண்டு பெண் குழந்தையும் இருக்கிறார்.இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். இந்நிலையில் தற்போது நடிகை சுரேகா வாணி அவர்கள் மது பாட்டிலுடன் இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement