அந்த பூனை என்ன தான் ஆச்சி – படத்தில் நீக்கப்பட்ட காட்சி குறித்து லோகேஷ் – வீடியோ இதோ.

0
901
lok
- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

மாஸ்டர் படத்தில் விஜய்யின் JD கதாபாத்திரத்தை விட விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரம் தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தது. பலரும் மாஸ்டர் படம் விஜய் படம் இல்லை விஜய் சேதுபதி படம் என்று கிண்டலடித்து வருகின்றனர். இந்த படத்தில் விஜய் சேதுபதியின் பல வசனங்கள் கைதட்டலை பெற்றது. அதிலும் குறிப்பாக ostrich பறவை முட்டை போடுவதோடுன் ஒப்பிட்டு விஜய் சேதுபதி சொன்ன வசனம் பல மீமாக வந்துகொண்டு இருக்கிறது. இந்த படத்தில் விஜய்யுடன் ஒரு பூனையும் வரும்.

- Advertisement -

இந்த படத்தில் அந்த பூனைக்கு கூட ஒரு முக்கிய பங்கு இருக்கிறதாம். அதாவது இந்த படத்தில் அந்த பூனை விஜய்யுடன் இருக்கும் வரை JD யாக இருக்கும் விஜய் எப்போதும் குடித்துக்கொண்டு எதை பற்றியும் கவலைப்படாமல் இருக்கும் ஒரு சோம்பேறியாக இருப்பார். ஆனால் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இரண்டு சிறுவர்கள் இறந்த பின்னர் அவர்களை பார்க்க JD அங்கே செல்லும் போது அந்த பூனை அவரிடம் இருந்து சென்றுவிடும் அதன் பின்னர் தான் படத்தில் ஒரு புதிய மனிதராக மாறுவார் JD என்று கூறப்பட்டது.

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற லோகேஷ் கனகராஜிடம், அந்த பூனை எங்கே போனது என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ஜெயிலில் அந்த பூனையை இறக்கி விட்ட பின்னர் விஜய் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் போது அந்த காலேஜ் பசங்க எல்லாம் அங்கே இருப்பார்கள். அப்போது அவர்கள் அந்த பூனையை எடுத்து சென்று விடுவது போல வைத்திருந்தோம். படத்தின் நீளம் காரணமாக அதை எடுத்துவிட்டோம் என்று கூறியுள்ள லோகேஷ், இதையெல்லாம் கேக்கும் போது எனக்கு Ostrich கதை தான் ஞாபகத்திற்கு வருகிறது என்று கேலியாக கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement