சின்னத்திரையில் பிரபலம் ஆனவர்களில் நடிகை மைனாவும் ஒருவர். இவரது உண்மையான பெயர் நந்தினி. சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா என்ற கேரக்டரில் நடித்து புகழ்பெற்றார்..இதனால் இவருக்கு மைனா என்ற பெயர் இவருக்கு வந்தது.
இந்நிலையில் சென்ற வருடம் இவருடைய கணவர் லெட்டர் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்..மைனாவின் கணவர் ஒரு ஜிம் மாஸ்டர். லெட்டர் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்தவுடன் இதற்கு மைனாதான் காரணம் என அவரது கணவர் வீட்டார் குற்றம் சாட்டினார். குறிப்பாக மைனாவின் கணவரின் தங்கை மிக மோசமாக மைனாமீது பழி சுமத்தினார்.
இந்நிலையில் இந்த பிரச்சனை குறித்து தற்போது வாயை திறந்துள்ளார் மைனா,
உண்மையான விஷயம் தெரிந்தால் மட்டும் பேச வேண்டும். என் கணவரால் நான் பிரபலம் ஆனதாக பேசிக்கொள்கின்றனர். ஆனால் அது உண்மை இல்லை. என்னால் தான் அவர் பிரபலம் ஆனார். இந்த விஷயம் தெரிந்தால் பேச வேண்டும் இல்லை என்றால் வாயை மூ*க்கொண்டு இருக்க வேண்டும்
என காட்டமாக பதில் அளித்தார்.
மேலும், என் கணவர் என்னிடம் உண்மையாக இல்லை. அந்த லெட்டரில் முதல் மனைவியின் சமாதியின் பக்கத்தில் தன்னை புதைக்க வேண்டும் என எழுதி இருந்தார். இதிலிருந்தே தெரிகிறது அவர் எனக்கு உண்மையாக இல்லை, என மிகக் கடுமையாக அவர்களுக்கு பதில் அளித்தார் மைனா.