40 நாட்களுக்கு பிறகு வீட்டை விட்டு வெளியே வந்த மீனா – கவலை தோய்ந்த புன்சிரிப்பு, ரசிகர்கள் ஆறுதல்.

0
394
meena
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் மீனா. இவர் கடந்த 1982 ஆம் ஆண்டு முதல் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுலகில் நடித்து வருகிறார். அதன் பின் கதாநாயகியாக நடித்து வந்தார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். அதிலும், இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு,அஜித், உள்ளிட்ட பல பிரபலங்களுடன் பிசியாக நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படத்தில் மீனா நடித்திருந்தார். பல வருடங்களுக்குப் பிறகு மீனா அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது மீனா பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

மீனா குடும்பம்:

இதற்கு இடையில் மீனா அவர்கள் வித்யாசாகர் என்பவரை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு நைனிகா என்ற ஒரு மகள் இருக்கிறார். நைனிகா தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மீனாவின் கணவர் வித்யாசாகர் பெங்களூரை சேர்ந்தவர். இப்படி ஒரு நிலையில் வித்யாசாகருக்கு ஏற்கனவே நுரையீரல் பிரச்சனை இருந்திருக்கிறது.

meena

மீனா கணவருக்கு ஏற்பட்ட பிரச்சனை:

இரண்டு நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய அளவுக்கு அவருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இதற்கு காரணம் புறாக்களின் எச்சம் கலந்த காற்றை சுவாசித்ததனால் ஏற்பட்ட நோய் என்று கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல், ஏற்கனவே இந்த பாதிப்பு இருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் தொற்று மீனாவின் கணவருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் இவருடைய உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது. இதனால் ஒரு தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்து சிகிச்சை அளித்து வந்தார்கள்.

-விளம்பரம்-

மீனாவின் கணவர் மரணம்:

இருந்தும் சிகிச்சை பலன் இல்லாமல் சமீபத்தில் தான் வித்யாசாகர் இறந்து விட்டார். வித்யாசாகரின் இறப்பிற்கு பல பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார்கள். தன்னுடைய கணவர் இறந்த பிறகு மீனா சமூக வலைத்தளம் பக்கமே அதிகம் வராமல் இருந்தார். இந்நிலையில் கணவன் இறப்பிற்குப் பிறகு மீனா வெளியே வந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மீனாவிற்கு ஆறுதலாக அவளுடைய தோழிகள் தான் இருக்கின்றார்கள். சமீபத்தில்கூட மீனா தன்னுடைய தோழிகளான சங்கவி, ரம்பா, சங்கீதா உள்ளிட்டோருடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் வெளியாகி இருந்தது.

கடற்கரைக்கு சென்ற மீனா:

இவர்கள் அவ்வப்போது மீனாவை சந்தித்து அவரை சோகத்தில் இருந்து மீட்டெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கலா மாஸ்டர் தனது பேஸ்புக் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து கொண்டார். அதில், ஏதோ ஒரு கடற்கரையில் மீனா அவருடைய தாய், மகள் நைனிகா, ரம்பா, கலா மாஸ்டர் ஆகியோர் இருக்கிறார்கள். அந்த புகைப்படத்தில் மீனாவின் முகத்தில் லேசான புன்னகை இருக்கிறது. மீனா கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய கணவர் இறப்பில் இருந்து மீண்டு வருவது வருகிறார். இந்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் மீனா மீண்டும் இயல்பு நிலைக்கு வர வேண்டும் என கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement