விஜய் நல்ல மனுஷனே இல்ல, கேப்டன் செய்த உதவியை மறந்துட்டார் – விஜய்யை வெளுத்து வாங்கிய மீசை ராஜேந்திரன்.

0
762
- Advertisement -

விஜய் நன்றி மறந்தவர் என்று விஜயகாந்த்க்கு நெருக்கமான ஒருவர் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னாடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அதிலும் சமீப காலமாகவே தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விஜய் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

இவருக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவருக்கு இருக்கும் பிரபலத்தினால் இவருக்கு ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கம் என்ற கட்சியை துவங்கி தேர்தலில் போட்டி போட்டும் இருக்கிறார்கள். அதோடு சமீப காலமாக விஜயும் தன்னுடைய விஜய் மக்கள் இயக்கத்தின் மூலமாக பல சேவைகளை செய்து வருகிறார். இதனால் இவர் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

விஜயின் ஆரம்பகால திரைப்பயணம்:

இப்படி புகழின் உச்சத்தில் உள்ள விஜயின் ஆரம்ப காலதிரைப்பயணம் மோசமாக இருந்தது. விஜய் நடிப்பில் முதலில் வெளிவந்த படம் நாளைய தீர்ப்பு. இந்த படத்தை விஜயனுடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகர் இயக்கியிருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. மேலும், இந்த படத்தை குறித்து கடுமையான விமர்சனங்கள் வெளியாகி இருந்தது. அது மட்டும் இல்லாமல் இவன் எல்லாம் ஒரு நடிகனா என்றெல்லாம் பலரும் திட்டியிருந்தார்கள்.

விஜய்-விஜயகாந்த் நடித்த படம்:

பின் எஸ் ஏ சந்திரசேகர் தன்னுடைய மகனை எப்படியாவது மக்கள் மத்தியில் பிரபலமாக்க வேண்டும் என்பதற்காக நடிகர் விஜயகாந்த் உடன் நடிக்க வைக்க முடிவு செய்து இருந்தார். அப்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக விஜயகாந்த் இருந்தார். இது தொடர்பாக விஜயகாந்த்திடம் எஸ்ஏ சந்திரன் கேட்டபோது அவரும் சரி என்று ஒத்துக் கொண்டார். அது மட்டும் இல்லாமல் அன்றைய காலகட்டத்தில் ஆக்சன் ஹீரோ என்றால் அது விஜயகாந்த் தான்.

-விளம்பரம்-

விஜய் நன்றி மறந்த செயல்:

ஆனால், அவர் விஜய் உடைய படத்தில் எளிமையான ரோலில் நடித்திருந்தார். வேறு எந்த ஹீரோவாக இருந்தாலும் இதை ஒத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். விஜயகாந்த்- விஜய் இருவரும் சேர்ந்து நடித்த படம் தான் செந்தூரப்பாண்டி. இந்த படத்தின் மூலம் தான் விஜய் மக்கள் மத்தியிலேயே பிரபலமடைந்தார். இப்படி விஜய் பிரபலமாக காரணமாக இருந்த விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது கூட அவரை ஒரு முறை கூட நேரில் சென்று சந்திக்கவில்லை.

நெட்டிசன்கள் கேள்வி:

இதுதான் ரொம்ப வருத்தத்தை அளிக்கிறது என்று விஜயகாந்திற்கு நெருக்கமான மீசை ராஜேந்திர அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். தற்போது இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும், தன்னை சினிமா துறையில் இந்த அளவிற்கு வளர்ந்து விட்டவரை விஜய் ஏன் இதுவரை சந்திக்கவில்லை? விஜய் நன்றி மறந்து விட்டாரா? என்றெல்லாம் விமர்சித்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Advertisement