என்னது புயலா ? நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து டபுள் மீனங்கில் பேசிய ஆத்மீகா.

0
1303
aathmika
- Advertisement -

சினிமாவைப் பொருத்தவரை பல்வேறு அறிமுக நடிகைகள் தங்களது முதல் படத்திலேயே மாபெரும் பிரபலத்தை அடைந்து விடுகிறார்கள். அந்த வகையில் தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலத்தை அடைந்தவர் நடிகை ஆத்மிகாபிரபல பாப் பாடகர் இசையமைப்பாளரான ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாக அறிமுகமான ‘மீசையமுறுக்கு’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஆத்மீகா. இந்த படம் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

-விளம்பரம்-

அதிலும் இந்த படத்தில் இடம்பெற்ற மாட்டிக்கிச்சே என்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானதை இந்த படத்தில் நடித்த ஆத்மிகா விருக்கும் சமூகவலைதளத்தில் பல்வேறு ஆரமிக்கள் கூட துவங்கப்பட்டது. ஆனால், இந்த படத்திற்கு பின்னர் அம்மணியை வேறு எந்த படத்திலும் காணமுடியவில்லை . மீசைய முறுக்கு படத்திற்கு பின்னர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் “நரகாசுரன்” படத்தில் நடித்தார்.  சில காரணங்களால் அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

- Advertisement -

முதல் படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ஆத்மிகாவிற்கு, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதே போல வைபவ் நடிப்பில் வெளியான ‘ஆர் கே நகர்’ படத்தில் கூட இவர் கமிட் ஆக இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால், அந்த படத்திலும் அம்மணிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் எப்படியாவது வாய்ப்பை பிடிக்க போராடி வருகிறார். இருப்பினும் சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அதே போல சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை பதிவிட்டு வருவதும் வழக்கம். இப்படி ஒரு நிலையில் இவர் சமீபத்தில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ‘என்னது புயலா ?’ என்று பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் தற்போது ‘நிவர்’ புயல் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதை இரட்டை அர்த்தத்தில் குறிப்பிட்டு ஆத்மீகா இப்படி ஒரு கேப்ஷனை பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement