இலங்கை யாழ்ப்பாணத்தில் விஜய் நடிக்கும் மெர்சல் பட பேனருக்கு தீ வைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
பெரும் பொருட்செலவில் உறுவாகியுள்ள மெர்சல் திரைப்படம் நாளை திரைக்கு வரவுள்ளது. பல பிரச்சனைகளை கடந்து தற்போது அனைத்து தடைகளையு தாண்டி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
படம் வெளியாகும் முன் வெளியாகும் தியேட்டர்களின் முன் கட் அவுட் வைப்பது வழக்கம். தமிழ்நாடு முழுவதும் இதற்க்காக பல்வேறு இடங்களில் கட் அவுட் மற்றும் பேனர்கள் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே போல் இலங்கையில் உள்ள யாழப்பானத்தின் ராஜா தியேட்டரில் மெர்சல் விஜயின் கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது. அந்த கட் அவுட்டின் ஒரு பகுதியயை தளபதி மற்றும் அவர்களது ரசிகர்களுக்கு வேண்டாத யாரோ சில மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்.
இதனால் அப்பகுதி பரபப்பாகியுள்ளது. மேலும், இதனை வைத்தது விஜ்யின் வளர்ச்சி பிடிக்காத அவரது சமீபத்திய சாதனைகளை பொருக்க முடியாத காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலர் தான் செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர் யாழ்ப்பாணம் போலீசார்.