கோர விபத்து, அப்பளம் போல் நொறுங்கிய கார், பட்டம் வென்ற மாடல் அழகிகள் பரிதாப பலி

0
395
- Advertisement -

மரத்தின் மீது கார் மோதி விபத்தில் 2 அழகிகள் சம்பவ இடத்திலேயே அநியாயமாக உயிரிழந்து உள்ளார்கள். தற்போது இந்த செய்தி கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கேரளாவின் பிரபல இளம் மாடல் அழகிகள் ஆன்சி கபீர் மற்றும் அஞ்சனா சாஜன். இவர்கள் இருவரும் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டில் மிஸ் கேரளா என்ற பட்டத்தை வென்றவர்கள். இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள். மேலும், ஆன்சி கபீர் திருவனந்தபுரம் அருகிலுள்ள ஆற்றங்கல்லை சேர்ந்தவர். அஞ்சனா சாஜன் திருச்சூரை சேர்ந்தவர்.

-விளம்பரம்-

இந்நிலையில் இவர்கள் மட்டுமில்லாமல் இவர்களுடன் சேர்ந்து 4 பேர்கள் திருவனந்தபுரத்தில் நடந்த மாடலிங் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். பின்னர் நிகழ்ச்சி முடிந்தவுடன் அன்றிரவு காரிலேயே கொச்சி புறப்பட்டார்கள். பிறகு நேற்று அதிகாலை எர்ணாகுளம் புறவழி சாலையில் இவர்கள் சென்று கொண்டிருந்த போது எதிரே பைக் வந்தது. பின் பைக்கின் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் காரை திருப்பினார். அப்போது கார் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி அப்பளம் போல் நொறுங்கியது.

- Advertisement -

காரில் இருந்த ஆன்சி கபீர் மற்றும் அஞ்சனா சாஜன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி அநியாயமாக உயிரிழந்தனர். பின் அவர்களுடன் வந்த 2 பேர் மிக மோசமாக படுகாயம் அடைந்தனர். பிறகு படுகாயம் அடைந்தவர்களை எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த இருவரில் ஒருவர் நிலை மட்டும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறி உள்ளார்கள்.

மேலும், இதுதொடர்பாக போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்சி கபீர் மற்றும் அஞ்சனா சாஜன் ஆகியோரின் உறவினர்களுக்கு இது குறித்த தகவல் போலீசார் கூறியுள்ளார்கள். தற்போது இந்த கோர சம்பவம் குறித்த செய்தி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதோடு இவர்கள் இருவருக்குமே 25, 26 வயது தான் ஆகிறது. மேலும், இவர்களுடைய இழப்பிற்கு கேரள திரையுலக பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து உள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement