இனிமே தான் பிரச்சனையே வரப்போகுது – காடுவெட்டி பட விளவில் ‘திரௌபதி 2’ படம் குறித்து அறிவித்த மோகன் ஜி.

0
161
- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என்று பலர் தற்போது ஹீரோவாக கலக்கி வருகிறார்கள். அந்த வகையில் தயாரிப்பாளராக இருந்து பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் ஆர்.கே சுரேஷ். இவர் தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சலீம், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை போன்ற படங்களை தயாரித்தார். அதன் பிறகு நடிகர் ஆர்கே சுரேஷ் அவர்கள் படங்களில் வில்லன் வேடத்தில் மிரட்டி இருக்கிறார்.

-விளம்பரம்-

தற்போது இவர் படங்களில் ஹீரோவாகவும் கலக்கி வருகிறார். அந்த வகையில் இயக்குனர் சோலை ஆறுமுகம் இயக்கத்தில் ஆர்.கே. சுரேஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் காடுவெட்டி. மறைந்த தலைவர் காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் குருவாக ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தினுடைய படப்பிடிப்புகள் எல்லாம் முடிவடைந்து விட்டது.

- Advertisement -

தென்மாவட்டம் படம்:

மேலும், இந்த படத்தினுடைய ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள திரையரங்கில் நடைபெற்றிருக்கிறது. இதில் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு இருந்தார்கள். இந்நிலையில் இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் மோகன் ஜி, பட விழாவிற்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். படத்தினுடைய வெற்றி இந்த விழாவிலேயே முடிவு செய்யப்பட்டு விட்டது. படத்தை அனைவரும் கொண்டாடத்தான் போகிறீர்கள்.

திரௌபதி படம் குறித்து சொன்னது:

பல தடைகளை தாண்டி தான் மறுமலர்ச்சி படம் வெளியானது. அப்போது உங்களுடன் காடுவெட்டி குரு அண்ணன் இருந்தார்கள். ஆனால், என்னுடைய திரௌபதி படம் வெளியாகும் போது தனி ஆளாக சென்சார் போர்டு இடம் போராடி வாங்கினேன். மக்களிடம் பணம் வாங்கி அந்த படம் உருவானது. பின் டிரைலர் ரிலீஸ் ஆகும் வரைக்கும் நான் பட்ட கஷ்டம் கொஞ்சம் நெஞ்சம் இல்லை. அதை புத்தகமாக எழுதினால் கூட பத்தாது. அந்த படம் வெளியான போது கிடைத்த ரிசல்ட் வேறு. அந்த மாதிரியான மறுமலர்ச்சி திரௌபதி படத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் இருந்து மிகப் பெரிய வெற்றியை காடுவெட்டி படம் தரும்.

-விளம்பரம்-

படம் குறித்து சொன்னது:

அந்த வெற்றியை நீங்கள் எளிதாக அடைந்து விட முடியாது. இப்போதுதான் இசை வெளியீட்டு விழா வரை வந்திருக்கிறீர்கள். யூடியூபில் கண்டிப்பாக சென்சார் இல்லாத ட்ரைலர் என்று சர்ச்சை வரும். அந்த பிரச்சினைகளை நீங்கள் எதிர்கொள்வதை பொருத்து தான் இந்த படம் எப்படிப்பட்ட வெற்றியை தரும் என்பது தெரியும். ரசிகர்களை நம்பி தான் தைரியமாக கதை எழுதுகிறோம். சினிமாவில் எங்களை எல்லாம் கூப்பிட்டு விருது கொடுக்கப் போகிறார்களா? சொல்லப்போனால், அந்த நிகழ்ச்சிக்கு கூட எங்களை அழைக்க மாட்டார்கள். ஆனால், ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று எங்களுக்கு தெரியும்.

காடுவெட்டி குறித்து சொன்னது:

இதைத்தான் இயக்குனர் சோலை ஆறுமுகத்திற்கும் நான் சொல்லிக் கொள்கிறேன். இது ஒரு மினிமம் கேரண்டி படமாக இருந்தாலும் ஒரு பெரிய ஹீரோவுக்கு இருக்கும் ஓபனிங் இருக்கு. சினிமாவில் இன்றைக்கும் இருக்கும் வறட்சியை காடுவெட்டி படம் தீர்த்து வைக்கும். காடுவெட்டி பெயர் வைத்துவிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு தரும் படம் தான் தர முடியும். அவரை பின்பற்றி வருகிறார்கள் பெண்களுக்கான விழிப்புணர்வு தரும் படமாக தான் இருப்பார்கள். அதை தான் காடுவெட்டி குரு எங்களுக்கு சொல்லிக் கொடுத்து இருக்கிறார். நிச்சயம் இந்த படம் தமிழ் நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வாக அமையும் என்று கூறியிருந்தார்.

Advertisement