திடீர்னு எப்படி சிவனடியார்லா வந்தது, BJP பணம் கொடுக்குதா ? பத்திரிகையாளர் கேள்வியால் கடுப்பான மோகன்.

0
580
mohan
- Advertisement -

மோகனின் அடுத்த திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் படத்தை பற்றி இயக்குனர் மோகன் கூறியிருப்பது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் கால் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் அவர்கள் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-337-1024x768.jpg

இருந்தாலும் இந்த படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை அடுத்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ருத்ரதாண்டவம். இந்த படமும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மையமாக கொண்ட கதை. இந்தப் படத்தை குறித்தும் சோசியல் மீடியாவில் சில சர்ச்சைகள் எழுந்து இருந்தது. இப்படி இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி இருந்தாலும் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

மோகனின் அடுத்த படம் :

அது மட்டுமில்லாமல் இவர் இயக்கிய மூன்று படங்களிலும் ரிச்சர்ட் ரிசி தான் கதாநாயகனாக நடித்து இருந்தார். மேலும், இவருடைய அடுத்த படத்திலும் ரிச்சர்ட் ரிஷியே கதாநாயகனாக? இல்லையா? என்று பல எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் மோகன் ஜி தான் இயக்கும் அடுத்த படத்தில் கதாநாயகனாக செல்வராகவனை களம் இறக்கி இருக்கிறார் என்ற தகவல் வெளியானது. தமிழ் சினிமாவுலகில் மிக பிரபலமான இயக்குனராக வலம் வந்தவர் செல்வராகவன்.

பீஸ்ட் படத்தில் செல்வராகவன் :

சமீப காலமாக இவர் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது இவர் தளபதி விஜய்யின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் பீஸ்ட் படத்தில் நடித்துஇருந்தார். இந்த படம் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. ஆனால், இந்த படத்தில் செல்வராகவனின் கதாபாத்திரம் பெரும் ஏமாற்றத்தை கொடுத்து இருந்தது. இதைதொடர்ந்து சாணிக்காகிதம் படத்தில் ஹீரோவாக நடித்து இருந்தார் செல்வராகவன்.

-விளம்பரம்-

மோகன் – செல்வராகவன் :

இதனை தொடர்ந்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் மீது ரசிகர்கள் பல எதிர்பார்ப்புகளுடன் இருக்கின்றன. இந்த படத்தில் நட்டி நடராஜனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்று அறிவித்து இருந்தார் மோகன். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் டைட்டில் இன்று வெளியாகி இருக்கிறது. இன்று இந்த படத்தின் பூஜையும் நடைபெற்றது.

படத்தின் ட்ரைலர் :

மேலும், இந்த படத்திற்கு ‘பகாசூரன்’ என்று தலைப்பை வைத்து இருக்கிறார்கள். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்த மோகன் ‘முத்துமலை முருகன் அருளுடன் இன்று பூஜை இனிதே நடைபெற்றது. அடுத்த திரைப்படத்தின் தலைப்பு. திங்கள் முதல் படப்பிடிப்பு ஆரம்பம் என்று பதிவிட்டிருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தது. அதில் ஒரு வசனம் காட்டப்படும் கதாபாத்திரங்கள் போன்றவை மக்கள் மத்தியில் சர்ச்சைக்கு உள்ளக்கியுள்ளது

படத்தின் சர்ச்சை :

இந்நிலையில் சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இயக்குனர் மோகனிடம் `இது சேலத்தில் நடந்த உண்மை சம்பவம் என்று கூறுகிறீர்கள் ஆனால் உங்களுடைய படங்களில் அதிகமாக இந்துக்களை பற்றி இருக்கிறது, ஒருவேளை பா.ஜா.கா உங்களுக்கு பணஉதவி செய்கிறதா? என்று செய்தியாளர் ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த மோகன் இங்கே 100க்கும் மேற்பட்ட மீடியாக்கள் இருக்கின்றன நீங்களே இதை கண்டுபிடித்து நிரூபியிங்கள். அதனை விட்டுவிட்டு தொடர்ந்து இந்த கேள்வியையே கேட்க அருவருப்பாக இருக்கிறது என்று கூறினார்.

bakasuran

மேலும் பேசிய இயக்குனர் மோகன் நாங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு வட்டிக்கு வாங்கி படத்தை எடுக்கிறோம் நீங்கள் அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்கிறீர்களா? என்று செய்தியாளர் மீது கோவப்பட்டார். மேலும் இந்த படத்தில் சிவனடியார்கள் வருகிறார்களே அது ஏன் என்றும், சாமியார்களை மட்டுமே நல்லவர்களாக காட்டுவதாக இது உள்ளது என்று செய்தியாளர் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த இயக்குனர் மோகன் நான் இந்து மதத்தை தவிர எந்த மதத்தை குற்றம் சொல்லியிருக்கிறோம் என்று கேள்வி எழுப்பினார்.

நான் அப்படித்தான் படம் எடுப்பேன் :

மேலும் சிவனடியார்கள் இந்த படத்தில் வருகிறார்களே என்ற கேள்விக்கு பதிலளித்த இயக்குனர் மோகன் அவர்கள் திரைப்படத்தில் வந்தால் என்ன தவறு என்று கூறினார். அப்படி ஏதாவது தவறாக இருக்கிறதா என்று படத்தை பார்த்துவிட்டு கூறுங்கள் என்றார். நான் தினமும் கோவிலுக்கு செல்கிறேன் நான் பார்த்து வியந்த கதாபாத்திரங்களை மட்டும்தான் என்னால் திரையில் கொண்டுவர முடியும். இதனை அடுத்த எடுக்கும் படங்களிலும் இதனை தொடர்ந்து செய்வேன் இதில் எந்த மாற்றமும் கிடையாது என்று கூறினார் இயக்குனர் மோகன்.

Advertisement