வேதனையின் உச்சத்தில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காதீர்கள் – செல்வராகவன் பதிவை கேலி செய்யும் நெடிசன்கள்

0
551
mohan
- Advertisement -

திரௌபதி, ருத்ரதாண்டவம் படங்களின் இயக்குனரின் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியிருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் அவர்கள் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இருந்தாலும் இந்த படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

-விளம்பரம்-

இதனை அடுத்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ருத்ரதாண்டவம். இந்த படம் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மையமாக கொண்ட கதை. இந்தப் படம் குறித்தும் சோசியல் மீடியாவில் சில சர்ச்சைகள் எழுந்து இருந்தது. இப்படி இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி இருந்தாலும் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

அது மட்டுமில்லாமல் இவர் இயக்கிய மூன்று படங்களிலும் ரிச்சர்ட் ரிசி தான் கதாநாயகனாக நடித்து இருந்தார். மேலும், இவருடைய அடுத்த படத்திலும் ரிச்சர்ட் ரிஷியே கதாநாயகனாக நடிப்பாரா? இல்லையா? என்று பல எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் மோகன்ஜி தனது அடுத்த படம் குறித்து சோசியல் மீடியாவில் பதித்துள்ளார். அந்த பதிவில் இவர் இயக்கும் அடுத்த படத்தில் கதாநாயகனாக செல்வராகவனை களம் இறக்கி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

செல்வராகன் ‘சாணிக் காயிதம்’ என்ற திரைப்படத்தில் நடிகராக செல்வராகவன் அறிமுகமானார். தற்போது இவர் தளபதி விஜய்யின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் மோகன் படத்தில் செல்வராகவன் கமிட்டாகி இருப்பது பெரும் பேசு பொருளாக மாறியிருக்கிறது. அதிலும் குறிப்பாக செல்வராகவன் மோகன் படத்தில் கமிட்டாகி ஏற்றுக் கொள்ளாத பலர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் செல்வராகவன் பதிவிட்ட தத்துவங்களில் ஒன்றை அவருக்கு மீண்டும் நினைவு படுத்தி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

அந்தப் பதிவில் ‘தயவு செய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காதீர்கள். இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என்று விட்டு விட்டு நன்கு உணவருந்தி ஓய்வெடுங்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு ஒன்று பிரச்சனையே இருக்காது இல்லை நீங்கள் முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள்.’என்று செல்வராகவன் குறிப்பிட்டு இருப்பதை சுட்டிக்காட்டி வரும் நெட்டிசன்கள் இந்த படத்தில் கமிட்டாகி பின்னர் எப்படி செல்வராகவன் பதிவிட்டு இருப்பார் என்று கேலி செய்து வருகிறார்கள்.

Advertisement