விஜய் வழங்கிய நிவாரண அரிசியை கேலி செய்து மோகன் ஜி போட்ட பதிவு

0
185
- Advertisement -

தளபதி விஜய் கொடுத்த நிவாரண நிதியை கிண்டல் செய்து இயங்குனர் மோகன் போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே ஒட்டு மொத்த தமிழகத்தையும் ஃபெஞ்சல் புயல் புரட்டி போட்டு இருந்தது அனைவரும் அறிந்ததே. இந்த புயலால் கடந்த சில நாட்களாகவே மக்களின் இயல்பு வாழ்க்கை மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இந்த புயல் கரையை கடக்கவே இரண்டு நாட்கள் ஆனது. இதனால் மழைப்பொழிவு அதிகமாக இருந்தது.

-விளம்பரம்-

இதன் காரணமாக ஆங்காங்கே நீர் தேங்கியும், வெள்ள பெருக்கெடுத்தும் சென்றிருந்தது. மேலும், புயலால் திருவண்ணாமலையில் யாரும் எதிர்பாராத வகையில் கனத்த மழை பெய்தது. இந்த மழையால் திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்டு இருந்தது. இந்த சம்பவம் அறிந்து மீட்பு பணிகள் தீவிரமாக செயல்பட்டு இருந்தார்கள். இருந்துமே இந்த நிலச்சரிவில் ஏழு பேர் அநியாயமாக உயிர் இழந்து இருக்கிறார்கள். இந்த சூழலில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பேருந்து மூலம் பனையூருக்கு அழைத்து சென்று இருந்தார்கள்.

- Advertisement -

விஜய் கொடுத்த நிவாரண உதவி:

அங்கு அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி இருந்தார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். ஆனால், சில பேர் விஜய் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாக செல்லாததை குறித்து சிலர் விமர்சித்து இருந்தார்கள். இன்னொரு தரப்பினர் அவருடைய சொந்த பணத்தில் உதவி செய்திருந்ததை பாராட்டி இருந்தார்கள். இதை அடுத்து விஜய் அவர்கள் பதிவு ஒன்று போட்டிருந்தார். அதில், புயல் எப்போதும் பேரிடரையும் பெரும் பாதிப்பையும் மக்களுக்கு உண்டாக்கும் ஓர் இயற்கைச் சீற்றமே. அதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை. இருப்பினும் எவ்வளவு பெரிய புயல், இயற்கைப் பேரிடர் வந்தாலும் நம்மைக் காக்க, நாம் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த அரசு இருக்கிறது,ஆட்சியாளர்கள் உள்ளனர் என்ற நம்பிக்கையுடன் தான் மக்கள் இருப்பர். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசோ, ஆட்சி பீடமோ, ஆபத்தான ஒவ்வொரு சூழலிலும் மக்களைக் கைவிடும் என்பதை அனுபவித்து உணர்கிறபோது, அம்மக்களின் தாங்கொணாத் துயரை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

விஜய் பதிவு:

நமக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள் எனப் பரிபூரணமாக நம்பி வாக்களித்து, அதிகாரத்தில் அமர்த்தி அழகு பார்த்த மக்களைப் பாதுகாக்க, முறையான திட்டங்களைத் தீட்டவில்லை. குறைந்தபட்ச பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கூடச் செய்யாமல் அவர்களைக் கையறு நிலையில் பரிதவிக்க விடும் சுயநல ஆட்சியாளர்களை என்னவென்று சொல்ல? மக்கள் துன்புறும் வேளையில் ஆட்சியாளர்களைக் குறிவைத்துக் குறைகூறி மட்டுமே அரசியல் செய்யும் கலாச்சாரத்தை நாம் பின்பற்றப் போவதில்லை என்கிற தீர்க்கமான முடிவை எடுத்திருக்கிறோம். ஆயினும் மக்கள் பக்கம் எப்போதும் நின்று அவர்களுக்காகக் குரல் கொடுத்து நிற்பதே நமது மக்களரசியல் நிலைப்பாடு என்பதால் இதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

-விளம்பரம்-

மக்களைப் பாதுகாப்பாக இருக்க வைப்பதற்கான நிரந்தரத் தீர்வை நோக்கி நகர்வது குறித்து அவர்கள் எள்ளளவும் சிந்திப்பதில்லை. காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர்ப் பாதுகாப்புச் சார்ந்து எந்த ஒரு முன்னெடுப்பையும் எடுப்பதில்லை. வெறும் தற்காலிகக் கண்துடைப்பு அறிவிப்புகளைச் செய்வதில் மட்டுமே முனைப்புடன் இருக்கின்றனர். இவ்வாறு செய்வதையே ஆட்சியாளர்கள் வாடிக்கையாகக் கொண்டிருப்பது உண்மையிலேயே வேதனையைத் தருகிறது. எவ்வகையிலாவது மக்களை ஏமாற்றி ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்றும் எல்லாவற்றையும் மக்கள் மறந்துவிடுவர் என்றும் மமதையில் இருந்த எவரும் மக்கள் மன்றத்தில் நீடித்து நிலைத்ததே இல்லை என்பதுதான் வரலாறு. எது நடந்தாலும் எப்போதும் போல எதிர்க் கட்சிகள் மீது ஏளனமாக விமர்சனம் வைத்து, காவி வர்ணம் பூசி, கபட நாடகமாடித் தப்பித்துக்கொள்ளலாம் என்று தற்போதைய ஆட்சியாளர்கள் எம் மக்களை நிரந்தர நிர்க்கதிக்கு ஆளாக்கி வருகின்றனர் என்று கூறி இருந்தார்.

மோகன் ஜி பதிவு:

இந்த நிலையில் நடிகர் விஜய் கொடுத்த நிவாரண உதவியை கிண்டல் செய்யும் வகையில் இயக்குனர் மோகன் ஜி பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில், விஜய் கொடுத்த நிவாரண பொருட்களை அங்கிருந்தவர்கள் காண்பிக்க சொல்லி இருக்கிறார்கள். அதை தான் இவர் டீவ்ட்டரில் பதிவிட்டு, தூக்க முடியாத அளவு அரிசி என்று கிண்டல் செய்து போட்டிருக்கிறார். இதை விஜய் ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

Advertisement