நீ படம் எடு உன்ன கைது பண்ணா கூட நான் ஜாமீன் எடுக்குறேன்னு சொன்னேன் – மோகன் ஜி மனைவி Bold பேச்சு.

0
776
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் முதல் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் அவர்கள் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-

இருந்தாலும் இந்த படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை அடுத்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ருத்ரதாண்டவம். இந்த படமும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மையமாக கொண்ட கதை. இந்தப் படத்தை குறித்தும் சோசியல் மீடியாவில் சில சர்ச்சைகள் எழுந்து இருந்தது. இப்படி இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி இருந்தாலும் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

பகாசூரன்

இப்படி ஒரு நிலையில் இவர் பகாசூரன் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் செல்வராகவன் நாயகனாக நடித்து இருக்கிறார். மேலும், நட்டி, ராதாரவி, ராஜன் என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்து இருக்கிறார். சமூகத்தில் நடக்கும் ஒரு முக்கிய நிகழ்வை மையமாகக் கொண்டு பகாசூரன் படத்தின் கதையை அமைத்துள்ளனர். இந்த திரைப்படம் கடந்த 17ஆம் தேதி வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து இயக்குனர் மோகன் ஜி பல நேர்காணல்களில் கலந்து கொண்டு வருகிறார்.

மோகன் ஜி மனைவி கூறியது :

இந்நிலையில் சமீபத்தில் கொடுத்திருந்த பேட்டியில் மோகன் ஜி மற்றும் அவரது மனைவியுடன் கலந்து கொண்டிருந்தார். அதில் மோகன் ஜி மனைவியிடம் அவருடைய கணவர் எடுக்கும் படங்கள் விமர்சனத்திற்க்கு உள்ளாவது குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “என்னுடைய கணவர் உண்மையில் அந்த கருத்தை முன்னிலை படுத்தி படம் எடுப்பதில்லை. அதே போல திரௌபதி படம் எடுக்கும் போது இந்த மாதிரியான பெயர் தனக்கு வரும் என்றும் அவர் எடுக்கவில்லை. அது தானாக நடந்து விட்டது.

-விளம்பரம்-

உதவ ஆட்கள் இருக்கிறார்கள் :

அவர் செய்வது தவறான விஷயமாக இருந்தால் அதனை தவறு என்று கூறலாம். ஆனால் என்னுடைய கணவர் யாருமே பேசாத ஒரு விஷியத்தை பற்றி பேசுகிறார். அதனால் அவருக்கு நான் அதரவாகத்தான் இருப்பேன். எந்த பிரச்சனை வந்தாலும் பார்துகொள்ளலாம் என்று தான் அவரிடம் சொல்லுவேன் எப்போதும் அவருக்கு ஊக்கம் கொடுத்துக்கொண்டே இருப்பேன். நீ காவல்துறையில் கைது ஆனாலும் கூட நான் பெயிலில் எடுக்கிறேன் என்று தான் கூறுவேன்.

என்ன நடந்தாலும் பார்த்துக்விடலாம் :

தொடக்கத்தில் திரெளபதி படம் வெளியான போது அதிக எதிர்ப்புகள் வந்தது அதனை பார்த்து நான் பயந்து விட்டேன். ஆனால் அதற்கு பிறகு எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற தைரியம் வந்துவிட்டது. நீ செய்றது தப்பு கிடையாது மக்களுக்கு விழிப்புணர்பு கொடுக்கத்தான் படம் எடுக்கிறாய் அதனால் அந்த ஆனாலும் பரவாயில்லை. எங்களுக்கு உதவவும் வெளியில் ஆட்கள் இருக்கின்றனர் என்றும் கூறினார் மோகன் ஜி மனைவி

Advertisement