பகாசூரன் படத்தை தொடர்ந்து மோகன் ஜி தனது அடுத்த படத்தின் ஹீரோவை அறிவித்து இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் கால் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் அவர்கள் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இப்படி இந்த படம் சமூகத்திற்கு தேவையான ஒரு படம் என்று ஒரு புறமும், இந்த படம் பிற்போக்கான படமாக இருக்கிறது என்று மற்றொரு புறமும் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. ஆனால், இதையல்லாம் தாண்டி இந்த படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று, நல்ல வசூலும் செய்து வருகிறது. இந்நிலையில் தான் இப்படத்தை தமிழ் நாடு முழுவதும் வெளியிட்டிங் GTM Presents நிறுவனத்தின் தயாரிப்பாளர் கௌதம் இயக்குனர் மோகன் ஜியை பாராட்டும் வகையில் பரிசு ஒன்றை வழங்கினார்.
மோகன் இயக்கிய படங்கள் :
இருந்தாலும் இந்த படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை அடுத்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ருத்ரதாண்டவம். இந்த படமும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மையமாக கொண்ட கதை. இந்தப் படத்தை குறித்தும் சோசியல் மீடியாவில் சில சர்ச்சைகள் எழுந்து இருந்தது. இப்படி இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி இருந்தாலும் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
பகாசூரன் :
இப்படி ஒரு நிலையில் இவர் பகாசூரன் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் செல்வராகவன் நாயகனாக நடித்துஇருந்தார். மேலும், நட்டி, ராதாரவி, vj லயா என்று பலர் நடித்த இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துஇருந்தார்.சமூகத்தில் பெண்கள் பாலியில் தொழில் எப்படி சிக்குகிறார்கள், செல் போன்கல் மற்றும் சமுக வலைத்தளத்தினால் பெண்களுக்கு என்னென்ன பிரச்சனை வருகிறது போன்றவற்றை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கி இருந்தார்.
மோகன் ஜியின் அடுத்த படம் :
இந்த படமும் ஓரளவிற்கு வெற்றியை கண்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த படத்தின் 25வது வெற்றி விழாவை படக்குழு கொண்டாடி இருந்தனர். இப்படி ஒரு நிலையில் மோகன் ஜி தன்னுடைய அடுத்த படம் குறித்த அப்டேட் ஒன்றை கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டு இருந்தார். ரிச்சர்டு ரிஷியின் படத்தைப் பகிர்ந்து, ”சில மீடியாக்களுக்கு.. இவரு யாருன்னு தெரியுதா.. காசி கங்கா ஆர்த்தியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
இந்த தடவை வேற மாதிரி ஒரு களம், வேற மாதிரி ஒரு ஆட்டம் 💥💥💥 pic.twitter.com/ZvrGN32zwb
— Mohan G Kshatriyan (@mohandreamer) March 18, 2023
வேற மாதிரி ஒரு ஆட்டம்
எல்லா கடவுள்களையும் வணங்குபவர் ரிச்சர்டு ரிஷி சார்.. நீங்களா ஏதாவது கிளப்பி விடாதீங்க.. அப்பறம் முக்கியமான செய்தி.. என்னோட அடுத்த படத்தின் கதாநாயகன் ரிச்சர்ட் சார் தான். அறிவிப்பு விரைவில்…என்றும் குறிப்பிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் மீண்டும் ரிச்சர்ட் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ‘இந்த தடவை வேற மாதிரி ஒரு களம், வேற மாதிரி ஒரு ஆட்டம்’ என்று பதிவிட்டுள்ளார்.