மலையாள மொழியில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் மோகன்லால். தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் எம்புரான். இந்த படத்தை பிரபல நடிகர் பிரித்விராஜ் தான் இயக்கியிருக்கிறார். மாபெரும் வெற்றி பெற்ற லூசிபர் படத்தினுடைய இரண்டாம் பாகம் தான் எம்புரான். இந்த படத்தில் மஞ்சு வாரியர், சுராஜ், பிரித்விராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
லூசிபர் படத்தில் கேரளாவின் முதல்வர் இறந்த பிறகு ஆட்சியை கைப்பற்றி மிகப்பெரிய போதை கும்பலை கொண்டு வருவதற்கு விவேக் ஓபராய் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இதை அறிந்த ஸ்டீபன் நெடும்பள்ளி களத்தில் இறங்கினார். அதோடு இந்த கும்பலுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆட்சியை இறந்த முதல்வர் மகனான டொவினோ தாமஸ் இடம் ஒப்படைக்க நினைக்கிறார். மோகன்லால்-ஸ்டிபன் நெடும்பள்ளி இணைந்து களத்தில் இறங்குகிறார்கள்.
இதோட லூசிபர் படத்தினுடைய கதை முடிகிறது. இப்போது எம்புரான் தொடங்குகிறது. டொவினோ, மோகன்லால் ஆசைப்பட்ட நல்ல ஆட்சியை தந்தாரா என்பதுதான் கதை. ஊழலில் ஆட்சி மூழ்கி இருக்கிறது. அதோடு தான் செய்யும் தவறுகளை எல்லாம் மறைக்க மத்தியில் ஆளும் கட்சியுடன் கூட்டணி, தனியாக கட்சி, சர்வதேச போதை கும்பல் என்று தொடர்ந்து அடுத்தடுத்த பிரச்சனைகள் வருகிறது. இதை அறிந்த மோகன்லால், ஸ்டீபன் உடன் சேர்ந்து இந்த பிரச்சனைக்கெல்லாம் முடிவு கொடுத்தாரா? தான் நினைத்தபடி நல்லாட்சியை கொண்டு வந்தாரா? போதைப் பொருள் கும்பலை அடக்கி வைத்தாரா?என்பதுதான் படத்தினுடைய மீதி கதை.
வழக்கம்போல மோகன்லால் என்ட்ரி எல்லாம் பயங்கர பில்டப் ஆகவும், மாசாகவும் இருக்கிறது. படம் தொடங்கி ஒரு அரை மணி நேரத்திற்கு கதை எங்கு செல்கிறது என்றே புரியவில்லை. அந்த அளவிற்கு ஒவ்வொரு சீனுமே பில்டப் தான். சொல்லப்போனால், மோகன்லாலின் ரசிகர்களுக்கே கடுப்பேற்றும் அளவிற்கு காட்சிகள் எல்லாம் இருக்கிறது. இரண்டாம் பாதி நன்றாக இருக்கிறது. குறிப்பாக, கிளைமாக்ஸ் காட்சியை பிரித்விராஜ் கையாண்டு இருக்கும் விதம் சிறப்பாக இருக்கிறது.
மேலும், படத்தில் வரும் நடிகர்கள் எல்லோருமே தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். மஞ்சு வாரியார் படத்தில் ஸ்கோர் செய்திருக்கிறார் என்றே சொல்லலாம். சில காட்சிகளில் அவருடைய நடிப்பு பாராட்டுகளை பெற்றிருக்கிறது. லூசிபர் லோக்கல் பாலிடிக்ஸ் என்பதால் எல்லோருக்குமே ஏற்ற வகையில் இருந்தது. ஆனால், எம்புரான் இரண்டாம் பாகத்தில் கே ஜி எஃப் போல சர்வதேச அளவில் பாலிடிக்ஸ், மாபியா என்ற கதைக்களமே வேற லெவலில் இயக்குனர் கொண்டு சென்றிருக்கிறார்.
பல இடங்கள் கதைக்கும் காட்சிக்கும் சம்பந்தமில்லாமல் இருக்கிறது. அதுவும் மோகன்லால் உடைய காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் சோதிக்க வைத்திருக்கிறது. அதோடு மூன்றாம் பாகத்திற்கான லீட் வைத்திருக்கும் காட்சிகள் ரசிகம்படியாக இருக்கிறது. டெக்னிக்கலாக படம் நன்றாக இருக்கிறது. ஒளிப்பதிவு, இசையும் படத்திற்கு பக்க பலத்தை சேர்த்திருக்கிறது. மொத்தத்தில் லூசிபர் அளவிற்கு எம்புரான் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
நிறை:
படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள் நன்றாக இருக்கிறது.
மாஸ் காட்சிகள் ஓகே
வசனங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
மஞ்சுவாரியர் நடிப்பு சிறப்பு
கதைக்களம் ஓகே
இசை, ஒளிப்பதிவு பக்க பலம்.
குறை:
கதைக்களத்தை சென்று கொண்டு சென்ற விதத்தில் இயக்குனர் நிறையவே கவனம் செலுத்தி இருக்கலாம்
நிறைய இடத்தில் திரைக்கதை சோதிக்க வைத்திருக்கிறது
நிறைய லாஜிக் மீறல்கள்
ஒரு ஹாலிவுட் ரேஞ்சுக்கு இயக்குனர் கொடுக்க முயற்சித்து இருக்கிறார். ஆனால், சுதப்பல் நடந்து இருக்கிறது.
முதல் பாதி பொறுமையாக செல்கிறது.
மொத்தத்தில் எம்புரான் – வெற்றியை தொடவில்லை