கூலி படத்துல நான் நடிக்கிறேனா? உண்மையை போட்டு உடைத்த குக் வித் கோமாளி மோனிஷா

0
232
- Advertisement -

குக் வித் கோமாளி மோனிஷா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார் மோனிஷா. அதற்கு முன் இவர் kpy நிகழ்ச்சி மூலம் தான் மீடியாவுக்குள் நுழைந்தார். அதன் பின் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று இருந்தார். கோமாளி நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியின் மூலமே இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு வந்தது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருந்த ‘மாவீரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் தங்கை ரோலில் மோனிஷா நடித்தார்.
அதன் பின் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி முடிவடைந்த ‘டாப் குக் டூப் குக்கு’ என்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்று இருந்தார். இதை அடுத்து இவர் சமீபத்தில் வெளிவந்த சுழல் 2 என்ற வெப் தொடரில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

மோனிஷா குறித்த தகவல்:

இந்த படத்தில் இவருடைய எதார்த்தமான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றிருக்கிறது. தற்போது இவர் விஜய் நடிக்கும் ஜனநாயகன், ரஜினியின் கூலி படத்திலும் நடிக்கிறார். இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் மோனிஷா, முப்பி கதாபாத்திரம் என்னுடைய மனதிற்கு ரொம்ப நெருக்கமான ரோல்.
இந்த வெப் சீரிஸ் பார்த்துவிட்டு நிறைய பேர் பாராட்டுகிறார்கள். இந்த கதாபாத்திரத்திற்காக என்னிடம் பேசும் போது சண்டை காட்சிகள் எல்லாம் இருக்கு என்று சொன்னார்கள். நமக்கு இப்படி ஒரு சீன் கொடுக்கிறார்கள். இது மாதிரி கிடைக்குமா? என்று இறங்கி பண்ணிடும் என்று நினைத்தேன்.

சூழல் 2 பற்றி சொன்னது:

எனக்கு கேரக்டர் ரோல் பண்ணனும் என்று ரொம்ப ஆசை. முப்பி நான் நினைத்ததுக்கும் மேலான ஒரு கேரக்டர். சண்டைக்காட்சிக்கு ரிகர்சல் பார்த்தோம். அப்போது மாஸ்டர் என்னை சோடா பீம் என்று தான் கூப்பிடுவார். உங்களுடைய எனர்ஜி கான்ஃபிடன்டிற்காக தான் அப்படி கூப்பிடுகிறேன் என்று சொல்வார். அதேபோல் ஜனநாயகன் படத்திற்கான பூஜைக்கு என்னை கூப்பிட்டது என்னால் நம்ப முடியவில்லை. காரணம், பெரிய டீம். அதில் நம்மை ஞாபகம் வைத்துக் கொண்டு கூப்பிடுகிறார்களா? என்று இருந்தது. அந்த பூஜையில் வேறொரு உலகத்தில் இருக்கிற மாதிரி தான் இருந்தேன். விஜய் சார் கிட்ட நான் ஒரு போட்டோ எடுக்கலாம் என்று கேட்டதும் வாங்கன்னு சொல்லி கூப்பிட்டார்.

-விளம்பரம்-

சினிமா அனுபவம்:

எந்த ஒரு ரியாக்ஷனுமே இல்லாமல் தான் இருந்தேன். அந்த தருணம் கனவை விட பெரியது. விஜய் சார் சூட்டிங் ஸ்பாட்டில் ரொம்ப அமைதியாக இருப்பார். அவரோட படத்தில் நானும் ஒரு பார்ட்டாக இருப்பது பிளஸ் தான்.
மாவீரன் படம் எனக்கு நிறைய கொடுத்திருக்கிறது. அதன் மூலமாகத்தான் சுழல் கிடைத்தது. இதுவரைக்கும் பெருசாக நான் யாரிடமும் சொல்லவில்லை, இப்ப சொல்கிறேன். கூலி படத்தில் நடிக்கிறேன். லோகேஷ் அண்ணாவும் மாவீரன் படத்தை பார்த்துவிட்டு தான் என்னை செலக்ட் பண்ணினார்.

ரஜினி குறித்து சொன்னது:

லாஸ்ட் மினிட்டில் தான் நான் நடிக்கிறேன் என்று முடிவானது. எனக்கு ரஜினி சாரோட ஒரு போட்டோ மட்டும் எடுக்கனும் என்று இருந்தது. சாருடைய பிறந்தநாள் அன்னைக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அவருடைய பிறந்தநாள் அன்னைக்கு அவர் கூட நடிக்கும் வாய்ப்பு வந்தது. அதெல்லாம் அவ்ளோ பெரிய வரம். சிவா அண்ணா ஜனநாயகனுக்கும் சரி கூலிக்கும் சரி என்னை விஷ் பண்ணினார். சூழல் முடித்து வெயிட் பண்ணிக் கொண்டிருக்கும்போது தான் கூலி, ஜனநாயகம் கிடைத்தது. அது கிடைத்த போது நமக்கு நல்லது நடக்கணும் என்று இருந்தது. நான் கிடைத்த எந்த வாய்ப்புக்காக இருந்தாலும் நம்மளால் முடிந்ததை பண்ணிக் கொண்டே இருக்கணும் என்று நினைப்பேன். அப்படித்தான் இப்பவும் பண்ணிக் கொண்டிருக்கிறேன். இனியும் பண்ணுவேன் என்று நிறைய விஷயங்களை மனம் திறந்து பகிர்ந்திருக்கிறார்.

Advertisement