Mr&Mrs சின்னத்திரையில் இருந்து விலகிய முதல் ஜோடி – ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம்.

0
433
Mr & Mrs
- Advertisement -

மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முதல் ஜோடி குறித்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதனாலேயே விஜய் டிவியில் ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை விட நிகழ்ச்சிகள் தான் ரசிகர்கள் மத்தியில் படு பேமஸ்.

-விளம்பரம்-

இதனால் சில நிகழ்ச்சிகளுக்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து சீசன் 1, 2, 3 என தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றது. அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்படும் நிகழ்ச்சி மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை. இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகர், நடிகைகள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொள்வது வழக்கம். இந்த நிகழ்ச்சி முதல் இரண்டு சீசன்களுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி இருந்தது.

- Advertisement -

மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சி:

அந்த மூன்றாவது சீசன் டிஆர்பியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. நீயா நானா கோபிநாத் மற்றும் தேவதர்ஷினி தான் நிகழ்ச்சியின் நடுவர்களாக பங்கு பெற்று இருந்தார்கள். நடந்து முடிந்த மூன்றாவது சீஸனில் சரத்- கிருத்திகா டைட்டில் வின்னர் என்ற பட்டத்தை பெற்றிருந்தார்கள். இந்த நிலையில் அனைவரும் எதிர்பார்த்திருந்த மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 4 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கப்பட்டது.

மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 4 நிகழ்ச்சி:

இந்த நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் மற்றும் அறந்தாங்கி நிஷா தொகுத்து வழங்கி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் அஜய் கிருஷ்ணா – ஜெஸ்ஸி, மகாலிங்கம் – ராஜேஸ்வரி, சிங்கப்பூர் தீபன் – சுகன்யா, ரஹ்மான் – ஃபரிணா, மதன் – ரேஷ்மா, யோகி – சத்யா, பிரவீன் – ஐஸ்வர்யா, ராம் – ஜானு, ஸ்ரீகுமார் – அணிலா, வசந்தகுமார் – ரேகா என மொத்தம் 10 ஜோடிகள் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ளார்கள். மேலும், இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

எழிமினேஷன் :

இந்த நிலையில் கடந்த வாரம் எழிமினேஷன் சுற்று நடைபெற்றது. இந்த எலிமினேஷன் சுற்றில் சில காரணங்களால் அஜய் கிருஷ்ணா- ஜெஸ்ஸி ஜோடி பங்கேற்கவில்லை. இதனால் அவர்களேபோட்டியிலிருந்து விலகிக் கொள்கிறோம் என கூறிவிட்டார்கள். பின் கோபிநாத் மற்றும் தேவதர்ஷினி ஒன்றாக முடிவெடுத்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 4ல் அஜய் கிருஷ்ணா – ஜெஸ்ஸி எவிக்ஷன் செய்துள்ளனர். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ajay

சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா:

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அஜய் கிருஷ்ணா. இவர் பிரபல பாடகர் உதித் நாராயணன் போல் அப்படியே பாடி பலமுறை வியக்க செய்து இருக்கிறார். அஜய் கிருஷ்ணா சென்னையை சேர்ந்தவர். இவர் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தான் மீடியாவுக்குள் நுழைந்தார். பின் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தற்போது இவர் பின்னணி பாடகராக திகழ்கிறார். கடந்த மே 13 ஆம் தேதி அஜய் கிருஷ்ணாவுக்கும் ஜெஸிக்கும் பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement