Mr And Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய முக்கிய ஜோடி.

0
346
- Advertisement -

மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் இருந்து முக்கிய ஜோடி வெளியேறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. தொலைக்காட்சிகள் அனைத்தும் சீரியலை தாண்டி பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதில் ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

இதனால் விஜய் டிவி பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கப்பட்ட நிகழ்ச்சி தான் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் கணவன் மனைவியாக நிகழ்ச்சியில் பங்கேற்று விளையாடுவது. ஆரம்பத்தில் 12 ஜோடிகள் இந்த நிகழ்ச்சியில் களம் இறங்கி இருந்தார்கள். பின் பல போட்டிகள், சவால்கள் உடன் இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது.

- Advertisement -

Mr. And Mrs. சின்னத்திரை நிகழ்ச்சி:

வழக்கம் போல் இந்த நிகழ்ச்சியை மாகாபா மற்றும் நிஷா தொகுத்து வழங்கி வருகிறார்கள். நடுவராக நீயா நானா கோபிநாத் மற்றும் தேவதர்ஷினி இருக்கிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சி 3 சீசன்களை கடந்து இருக்கிறது. கடந்த மூன்றாவது சீசனில் சரத் – கிருத்திகா ஜோடி டைட்டில் வின்னர் ஆனார்கள். இந்த டைட்டில் வின்னர் ஜோடிக்கு 10 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டு இருந்தது. யாருமே எதிர்பார்க்காத சரத்- கிருத்திகா ஜோடி தான் டைட்டில் வின்னர் ஆகி இருக்கிறார்கள். இது பல பேருக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் சந்தோஷத்தை அளித்திருக்கிறது.

Mr. And Mrs. சின்னத்திரை சீசன் 4:

தற்போது இந்த நிகழ்ச்சியின் 4வது சீசன் சமீபத்தில் துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் அஜய் கிருஷ்ணா – ஜெஸ்ஸி, மகாலிங்கம் – ராஜேஸ்வரி, சிங்கப்பூர் தீபன் – சுகன்யா, ரஹ்மான் – ஃபரிணா, மதன் – ரேஷ்மா, யோகி – சத்யா, பிரவீன் – ஐஸ்வர்யா, ராம் – ஜானு, ஸ்ரீகுமார் – அணிலா, வசந்தகுமார் – ரேகா என மொத்தம் 10 ஜோடிகள் போட்டியாளர்களாக கலந்து கொண்டு இருந்தார்கள். இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

Mr. And Mrs. சின்னத்திரை எலிமினேஷன்:

தற்போது இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. முதலில் இந்த நிகழ்ச்சியில் இருந்து அஜய் கிருஷ்ணா – ஜெஸ்ஸி ஜோடி தாமாகவே விலகி விட்டனர். அதன் பின்னர் நடந்த எலிமினேஷன் சுற்றில் யோகி – சத்யா ஜோடி வெளியேறி இருந்தார்கள். இந்நிலையில் இந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் எலிமினேட் ஆகியிருக்கும் ஜோடி குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் இந்த வாரம் நடைபெற்ற எலிமினேஷன் சுற்றில் நடிகை அணிலா- ஸ்ரீகுமார் ஜோடி வெளியேறி இருக்கிறார்கள்.

நடிகை அணிலா குறித்த தகவல்:

நடிகை அணிலா அவர்கள் விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பாவம் கணேசன் சீரியலில் கதாநாயகன் கணேசனின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன் இவர் சின்னதம்பி சீரியலிலும் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்று இருக்கிறார். தற்போது அணிலா நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருப்பது மற்ற போட்டியாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement