ஒரே ஒரு பாட்டுக்காக இசையமைப்பாளர் தேவா ஜெயிலுக்கு போனாராம் – எந்த பாட்டு? ஏன் தெரியுமா?

0
102
- Advertisement -

சிறை கைதிக்காக இசையமைப்பாளர் தேவா செய்திருக்கும் செயல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இசையமைப்பாளராக திகழ்பவர் தேவா. இவர் இசையமைப்பாளர் மட்டுமில்லாமல் பாடகரும் ஆவார். இவர் சினிமா துறையில் கடந்த 20 வருடங்களாக பயணித்து வருகிறார். இசையமைப்பாளர் தேவா என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது கானா தான்.

-விளம்பரம்-

அந்த அளவுக்கு இவருடைய கானா பாடல்கள் எல்லாம் பட்டி தொட்டி எங்கும் பிரபலம். இவருக்கு என்று ஓரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஆரம்ப காலங்களில் இசை கலைஞர்களான காமேஸ், ராஜாமணி ஆகியோரிடம் இவர் உதவியாளராக பணியாற்றி இருந்தார். அவர்களிடம் இவர் ஹார்மோனியம் வாசிப்பதையும் கற்றுக் கொண்டார். அதன் பின்னர் இசை கலைஞர்களான சந்திர மௌலி, எஸ் வி சேகர் உள்ளிட்ட பலரிடமும் ஹார்மோனியம் வாசிப்பாளராக தேவா பணியாற்றி இருந்தார்.

- Advertisement -

தேவாவின் இசைப்பயணம்:

அதனை தொடர்ந்து இவர் சில காலம் தூர்தர்ஷனில் அலுவலக பணியாளராக பணியாற்றி இருந்தார். ஆரம்பத்தில் திரைப்படங்களில் இவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. அதனால் இவர் அதிகம் பக்தி பாடல்களில் கவனம் செலுத்தினார். இதுவரை இவர் கிட்டத்தட்ட 400 க்கும் மேற்பட்ட பக்தி பாடல்களை இசையமைத்திருக்கிறார். பின் 1984 ஆம் ஆண்டு ராமராஜன் நடிப்பில் வெளியான மனசுக்கேத்த மகாராசா என்ற படத்தில் இசையமைப்பாளராக தேவா அறிமுகமானார்.

தேவா குறித்த தகவல்:

அதன் பின்னர் இவர் பல படங்களுக்கு இசை அமைத்தார். மேலும், இவர் விஜய், அஜித், ரஜினி, கமல் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைத்து பாடியிருக்கிறார். சொல்லப் போனால் 90 காலகட்டத்தில் வெளிவந்த தேவாவின் பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் கேட்கப்பட்டு தான் வருகிறது. ஆரம்பத்தில் இவரை பலரும் தேவா என்று தான் அழைத்தார்கள். பின் இவருடைய இசையால் தேனிசைத் தென்றல் தேவா என்று அழைக்கப்பட்டார்.

-விளம்பரம்-

இந்து படம்:

இப்படி இருக்கும் நிலையில் சிறை கைதிக்காக தேவா செய்திருக்கும் செயல் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, பிரபுதேவா- ரோஜா நடிப்பில் வெளிவந்த படம் இந்து. இந்த படத்தில் தேவா தான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற வா முனிமா என்ற பாடல் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனது. இந்த பாடலை மனோ தான் பாடியிருந்தார். ஆனால் இந்த பாடலை மனோவிற்கு முன்பு கானா பாடகர் பழனியப்பன் என்பவர் தான் பாட இருந்தார். இதற்காக இவரைத் தேடி தேவா அலைந்து கொண்டிருந்தார். அப்போதுதான் பழனியப்பன் சென்ட்ரல் ஜெயிலில் கைதியாக இருந்தது தெரியவந்தது.

சிறைக்கு தேவா சென்ற காரணம்:

உடனே இயக்குனருடன் தேவா ஜெயிலுக்கு சென்றிருந்தார். அப்போது ஜெயிலர், நான் பாட அனுமதி கொடுக்க தயார். ஆனால், நீங்கள் பாட அழைத்து செல்லும்போது கைதி தப்பித்துவிட்டால் பிரச்சினையாகிவிடும். அவர் தூக்கு தண்டனை கைதியாக இருக்கிறார். இருந்தாலும் அவரை பாட ஒற்றுக்கொள்கிறேன். ஆனால், கையில் விலங்கு மாட்டிக்கொண்டு தான் பாட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு தேவா, ஒரு கலைஞனை கையில் விலங்கு மாட்டிக்கொண்டு பாட வைக்க என்னால் அனுமதிக்க முடியாது என்று அங்கிருந்து கிளம்பி இருக்கிறார். அதற்கு பிறகு தான் பாடகர் மனோவை பாட வைத்திருக்கிறார். ஒரு சிறை கைதியை பாட வைக்க தேவா செய்த முயற்சியை பார்த்து பலருக்கும் ஆச்சரியமாக தான் இருக்கிறது.

Advertisement