ஜேம்ஸ் வசந்தனுக்கு இவ்வளவு பெரிய பசங்க இருக்காங்களா. ஆனால், இப்படி ஒரு பிரச்சனைகளா அவரது வாழ்வில்.

0
38498
james-Vasanthan
- Advertisement -

தமிழ் திரைப் படம் இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை ஞாபகம் இருக்குங்களா?? அவரைப் பற்றி தான் பார்க்க போகிறோம். அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? அவருடைய குடும்பம் என்பதை பற்றி எல்லாம் பார்க்கலாம். இவர் 1964 ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி பிறந்தவர். ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் பிறந்து வளர்ந்தது எல்லாமே திருச்சியில் தான். ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் முதலில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அதற்குப் பிறகு தான் திரைப் படங்களுக்கு இசை அமைக்க தொடங்கினார். ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் சென்னையில் உள்ள கொட்டிவாக்கத்தில் வசித்து வருகிறார்.

-விளம்பரம்-
தனது மனைவியுடன் ஜேம்ஸ் வசந்தன்

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் சுகந்தி என்ற பெண்ணை 1991 ஆம் ஆண்டு திருச்சியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி 23 வருடங்கள் ஆகிவிட்டது. மேலும், இவர்களுக்கு ஷில்பா என்ற ஒரு மகளும், சச்சின் என்ற மகனும் உள்ளார்கள். இவர் தமிழ் திரைப்பட இசை அமைப்பாளர், இயக்குனர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பல முகங்களை கொண்டவர்.

- Advertisement -

ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் திரைப் படங்களுக்கு இசை அமைப்பதற்கு முன் 10 ஆண்டுகளாக சன் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி, மக்கள் தொலைக்காட்சி என பல தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அது மட்டும் இல்லாமல் அப்போது இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் காலத்தில் பிரபலமான தொகுப்பாளர் என்று கூட ஜேம்ஸை சொல்லலாம். அதற்கு பின் தான் இசை அமைப்பாளர் ஆனார்.

மேலும், இவர் சுப்பிரமணியபுரம், பசங்க, நாணையம், ஈசன், நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ போன்ற பல படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவர் நிறைய ஆல்பம் பாடல்களைக் கூட இசையமைத்து உள்ளார். தற்போது சமூக வலைத்தளங்களில் ஜேம்ஸ் வசந்தன் குடும்ப படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதோடு அந்த புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் ஜேம்ஸ் வசந்தனுக்கு இவ்வளவு பெரிய மகனா?? என்றும் வியந்து போய் உள்ளார்கள்.

-விளம்பரம்-

இது ஒரு புறம் இருக்க கடந்த 2014 ஆம் ஆண்டு பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவர் ஜேம்ஸ் வசந்தன் மீது பாலியல் புகார் அளிக்க, ஜேம்ஸ் வசந்தன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளியே வந்தார். அதன் பின்னர் ஜேம்ஸ் வசந்தன் மனைவி சுகந்தி, தனது கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போகிறார் என்று போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் அப்பெண்ணின் குடும்ப போட்டோவை பேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ளது. எனது கணவர் ஜேம்ஸ் வசந்தன் அக்குடும்பத்துக்கு தலைவர் என்பது போலவும் வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. எனவே 2வது திருமணம் செய்த ஜேம்ஸ் வசந்தன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இருந்தார். இப்படி ஜேம்ஸ் வசந்தனின் வாழ்வில் பலரும் அறிந்திடாத பல விஷங்கள் நடந்தேறியுள்ளது.

Advertisement