இவனுக்கெல்லாம் மார்க்கெட் இல்லன்னு சொன்னாங்க – ‘குடும்பஸ்தன்’ மூலமாக கம் பேக் கொடுத்த அபிலாஷ் உருக்கம்

0
355
- Advertisement -

2000த்தின் துவக்கத்தில் ஒளிபரப்பாகிய சிறுவர்களுக்கு பிடித்தமான சீரியல்களில் ஒன்று ‘மை டியர் பூதம். இந்த சீரியல் குழந்தைகள் மத்தியில் அதிகம் விரும்பி பார்க்கப்பட்ட ஒரு சிரியலாக அமைந்தது. இந்த சீரியலில் நடித்த எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் தற்போது சினிமாவில் நடிகர் நடிகைகளாக திகழ்ந்து வருகின்றனர். அந்த சீரியலில் பூதமாக மூசா என்னும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் அபிலாஷ். இவர் சமீபத்தில் வெளியான ‘குடும்பஸ்தன்’ படத்தில் மோதிலால் ஜுவல்லர்ஸ் மாணிக் சந்த் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

சமீபத்தில் அளித்த பேட்டியில் அபிலாஷ் , குடும்பஸ்தன் படம் மூலமாக எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதை நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. குடும்பஸ்தன் படத்தில் முதலில் நான் எக்ஸிக்யூட்டிவ் ப்ரொடியூசர் ஆக வேலை செய்ய தான் போனேன். அங்கு ‘மாணிக் சந்த்’ கதாபாத்திரத்துக்கான ஆடிஷன் நடந்து கொண்டிருந்தது. அப்போ எழுத்தாளர் பிரசன்னா சார் தான் நீங்க ஏன் இந்த கதாபாத்திரம் பண்ணக்கூடாது என்று கேட்டார். அதற்கு நான் , அப்போ படத்தின் வேலைகளை எல்லாம் யார் பார்ப்பது என்று மறுத்து விட்டேன்.

- Advertisement -

குடும்பஸ்தன் வாய்ப்பு:

பின், ஒரு வாரத்திற்கு பிறகு, அந்த கதாபாத்திரத்திற்கு யாரும் செட் ஆகவில்லை என்று மீண்டும் என்னை பிரசன்னா சார் மற்றும் ப்ரொடியூசர் வினோத் சார் எல்லாம் சேர்ந்து நடிக்க சொன்னார்கள். அந்த கதாபாத்திரத்திற்கு ஹிந்தி ரொம்ப முக்கியம். ஆனால், எனக்கு சுத்தமாக ஹிந்தி தெரியாது. அதனால் வசனங்களை எல்லாம் எனக்கு புரிகிற மாதிரி தமிழில் எழுதிக் கொடுத்தார்கள். அப்புறம் இந்த கதாபாத்திரம் சிறப்பாக அமைய இயக்குனர் ராஜேஷ் சார் மற்றும் மணிகண்டன் சார் எல்லாம் ரொம்ப ஹெல்ப் பண்ணாங்க.

திரைப்பட வாய்ப்புகள்:

மேலும், நான் காலேஜ் முடித்துவிட்டு திரைப்படங்களில் நடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். அப்படித்தான் எனக்கு நாகேஷ் திரையரங்கம், தோனி கபடி குழு போன்ற பட வாய்ப்புகள் கிடைத்தது. அதற்குப் பிறகு ஒரு பட வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அது நடக்கவில்லை. அதில் இருந்த ஒருத்தர், இந்த பையன எல்லாம் வச்சி ஏன் படம் எடுக்குறீங்க, இவனுக்கெல்லாம் மார்க்கெட்டே கிடையாது என்று சொன்னாரு. அதனால அந்த படத்தில் இருந்து என்னை வெளியேற்றினார்கள். அதற்குப் பிறகுதான், மார்க்கெட் இருந்தா தான் இங்கு நடிக்க முடியுமா என்கிற கேள்வி எனக்குள் இருந்தது.

-விளம்பரம்-

டெக்னீசியனாக முடிவெடுத்ததற்கு காரணம்:

பின், படத்தை எப்படி தயாரிக்கிறாங்க, அதை எப்படி வியாபாரம் பண்றாங்க என்கிற பிராசஸை முழுமையாக தெரிந்து கொண்டால் மட்டும் தான் மார்க்கெட் என்றால் என்னனு நமக்கு தெரியும் என்று நான் கற்றுக் கொண்டேன். ‘ மை டியர் பூதம்’ தொடர் என் வாழ்க்கையில் கிடைத்த பெரிய மையில் கல். அந்த சீரியலுக்கு நான் நிறைய நன்றி கடன் பட்டிருக்கிறேன். சின்ன வயசுல ஸ்கூல் படிக்கும்போது நான் நிறைய மோனோ ஆக்ட் போட்டிகளில் கலந்து கொள்வேன். அதன் மூலம் எனக்கு நடிகனாக வேண்டும் என்கிற ஆசை வந்தது.

மை டியர் பூதம் வாய்ப்பு:

அப்புறம் என் அப்பாவின் பிரண்டு மூலமாக தான் மை டியர் பூதம் ஆடிஷனுக்கு வந்து செலக்ட் ஆனேன். இந்த சீரியல் மூலமாக எனக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள். இளங்கோ என்ற ரசிகர் எனக்கு கடந்த 20 வருடங்களாக பிறந்தநாளுக்கு மறக்காம வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார். அமெரிக்காவில் இருந்து ஒருவர் என்னை தத்தெடுத்துக் கொள்கிறேன் என்று கேட்டார்கள். அந்த அளவுக்கு விஷயங்கள் இந்த தொடர் மூலம் நடந்தது. மை டியர் பூதம் பண்ணும் போதே, பார்த்திபன் சார் படம், கேஸ் ரவிக்குமார் சார் வரலாறு படம், விஷ்ணு வர்தன் படம் போன்ற வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால், எனக்கு டைம் இல்லாததால் எதிலும் நடிக்கவில்லை.

நடிக்காமல் இருந்ததற்கு காரணம்:

‘மை டியர் பூதம்’ முடிக்கும்போது நான் பத்தாவது படித்துக் கொண்டிருந்தேன். அதற்குப் பிறகு என்னுடைய வீட்டிலும் நடித்தாலும் படிப்பு முக்கியம் என்று சொல்லிவிட்டார்கள். நான் இன்ஜினியரிங் படித்ததால் எனக்கு வாய்ப்புகள் தேட சுதந்திரம் கிடைக்கவில்லை. அப்புறம் படிச்சு முடிச்சுட்டு ட்ரை பண்ணும் போது தான் ‘நாகேஷ் திரையரங்கம்’ கிடைத்தது. மேலும், படித்தாலும் இடையே லைம் லைட்டில் இருந்திருக்கலாம் என்கிற வருத்தம் எனக்கு இருந்திருக்கிறது. ஆனாலும், நம்ம வேலையை நாம் சரியாக செய்து கொண்டு போனால் நமக்கு தேவையானது நமக்கு கிடைக்கும். இப்ப குடும்பஸ்தன் படத்திற்கு பிறகு இரண்டு படங்களில் கமிட் ஆகியிருக்கிறேன் என்று அபிலாஷ் கூறியுள்ளார்

Advertisement