பொதுவாகவே சினிமா உலகில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் வில்லிகளில் ஒரு சில பேரை யாராலும் மறக்க முடியாது. அந்த வகையில் வில்லி கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை சூசன் ஜார்ஜ். இவர் 2010 ஆம் ஆண்டு பிரபுசாலமன் இயக்கத்தில் வெளிவந்த மைனா படத்தில் சுதா பாஸ்கர் அதாவது போலீசுக்கு மனைவி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது.
இந்தப் படத்திற்கு பிறகு இவர் நண்பேண்டா, அர்ஜுனன் என் காதலி, ராரா, நர்த்தகி, ராட்சசன் உட்பட பல படங்களில் நடித்திருந்தார். மேலும், இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களிலும் நடித்துள்ளார். அதிலும் சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் சீரியலில் மூலம் இவர் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார்.
இதையும் பாருங்க : சட்டையை திறந்துவிட்டு பீச்சில் ஹாயாக காத்து வாங்கிய சம்யுக்தா – வைரலாகும் வீடியோ.
இந்நிலையில் தற்போது இவருடைய புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் வியந்து போய் உள்ளார்கள். அது நடிகை சூசன் தன் மகனுடன் இருக்கும் புகைப்படம். பல பேருக்கு சூசனுக்கு திருமணம் ஆனதா? என்று தெரியாத நிலையில் இவர் தன் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நடிகை சூசன் ஒரு போட்டியாளராக கலந்து கொள்ள இருப்பதாக ஒரு பக்கம் பேசப்பட்டு வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. அப்படி இவர் கலந்துகொண்டால் கண்டட் கொடுப்பதில் இன்னொரு வனிதாவாக இருப்பதற்கு ஆச்சரியம் எதுவும் இல்லை என்பது உறுதி.