இந்த காரணத்தில் தான் நான் சீரியலை விட்டு விலகினேன் – நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலை குறை சொன்ன ரக்ஷிதா.

0
662
rachitha
- Advertisement -

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இலிருந்து ரக்ஷிதா விலகியதை தொடர்ந்து ரசிகர்கள் பேரதிர்ச்சியில் உள்ளார்கள். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை தொடர்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரக்ஷிதா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் அறிமுகம் ஆனார். இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி2, சரவணன் மீனாட்சி 3 போன்ற சீரியல்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் மகா என்ற கதாபாத்திரத்தில் ரக்ஷிதா நடித்து வந்தார்.

-விளம்பரம்-

இந்த தொடர் 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது. நாம் இருவர் நமக்கு இருவர் தொடரின் முதல் பாகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதில் மிர்ச்சி செந்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ரக்ஷிதா நடித்து வந்தார். இவர்களுடைய ஜோடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. மேலும், பல திருப்பங்களுடனும், விறுவிறுப்புடனும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இந்த சீரியலில் இருந்து ரக்ஷிதா விலகுவதாக அறிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

மேலும், இது குறித்து ரக்ஷிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, என்னை விரும்பும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. அதுமட்டுமில்லாமல் இன்ஸ்டாகிராமில் என்னை பின் தொடர்பவர்களுக்கு நன்றி. உங்களை வரவேற்கிறேன். நாம் இருவர் நமக்கு இருவர் தொடரிலிருந்து இனி நான் இல்லை. நான் சீரியலில் இல்லை என்பது உங்களில் பலருக்கு ஏமாற்றமாக இருக்கும் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், சில சூழ்நிலை காரணத்தினால் தான் என்னால் சீரியலில் நடிக்க முடியாமல் போனது. அதனால் தயவு செய்து இந்த முடிவை எல்லோரும் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏமாற்றம் தந்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு வருத்தமாகத் தான் உள்ளது. ஆனால், பல நேரங்களில் மதிப்பற்றவளாக நான் உணர்ந்தேன்.

இந்தத் தொடரில் எனக்கு மதிப்பில்லை என்பதை உணர்ந்து தான் இந்தத் தொடரில் இனி நடிக்க வேண்டாம் என்று நினைத்தேன். நான் இந்த தொடரில் இருக்கிறேனா? இல்லையா? என்று எந்த வித்தியாசமும் இல்லை என்பதை உணர்ந்ததால் தான் நான் இந்த முடிவை எடுத்தேன். அதனால் பெரிதாக யாரும் எதையும் எடுத்துக்கொள்ள வேண்டாம். மேலும், நாம் நமக்கு இருக்கும் மற்ற வேலைகளில் கவனம் செலுத்துவோம். வழக்கம் போல் நாம் இருவர் நமக்கு இருவர் தொடருக்கு உங்களுடைய ஆதரவை தாருங்கள்.

-விளம்பரம்-

எல்லோரும் சந்தோஷமாக இருங்கள் என்று அவர் பதிவிட்டு இருந்தார். இப்படி ரக்ஷிதா பதிவிட்ட பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ரக்ஷிதாவின் இந்த முடிவை பலர் வரவேற்று வரும் நிலையில் இவரது ரசிகர் ஒருவர் உங்களுக்கு இந்த சீரியல் worth இல்ல எங்க பாத்தாலும் ஹீரோ தான் இருக்காரு. அவரே பாத்துக்க வேண்டியது தான. அவங்க சீரியல் பாபாப்ங்களா எப்படி அவங்களுக்கு மட்டும் கதை புரியுது என்று கூறியதற்கு ரக்ஷிதாவும் அதை ஒப்புக்கொண்டுள்ளார்.

Advertisement