‘இன்னும் 5 மாசம் தான்’ – கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை.

0
682
naam
- Advertisement -

கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகர். விஜய் தொலைக்காட்சியில் சமீப காலமாகவே சினிமா டைட்டல்களை மையமாக கொண்டு பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. கடைக்குட்டி சிங்கம் ஈரமான ரோஜாவே, நாம் இருவர் நமக்கிருவர் என்று சினிமா தலைப்புகளை வைத்து பல்வேறு சீரியல்கள் வந்தது. அதே போல ராஜா ராணி, கனா காணும் காலங்கள், ஆபீஸ், மௌன ராகம் என்று பல சீரியல்கள் இரண்டு பாகங்கள் வெளியானது. அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கிருவார் சீரியலும் இரண்டு பாகமாக ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

இந்த தொடரின் முதல் பாகத்தில் செந்தில், ரக்ஷா, ராஷ்மி என்று பலர் நடித்து இருந்தனர். இதில் தாமரை என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ராஷ்மி. இப்படி ஒரு நிலையில் இவருக்கு கிறிஸ்துவ முறைப்படி திருமணம்கடந்த ஆண்டு திருமணம் முடிந்தது. நடிகை ராஷ்மிக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் தேதி ரிச்சு என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் பிப்ரவரி 2021 ஆண்டு திருமணம் நடைபெற்றது.

- Advertisement -

நாம் இருவர் நமக்கு இருவர் ராஷ்மி :

இப்படி ஒரு நிலையில் தான் கர்பமாக இருக்கும் மகிழ்ச்சியான விஷயத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டு இருக்கிறார். திருமணத்துக்கு பிறகு விஜய் டிவியில் ரீ என்ட்ரி கொடுத்த இவர் ராஜபார்வை என்ற தொடரில் நடித்து அசத்தி வந்தார். இந்த சீரியல் சமீபத்தில் தான் நிறைவடைந்தது என்பதும்குறிப்பிடத்தக்கது. ஆனால், இவருக்கு பெயரை வாங்கி கொடுத்தது என்னவோ நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் தான்.

பிரபல சீரியல் நடிகைக்கு கோலாகலமாக நடந்த திருமணம் - வீடியோ

திடீரென்று நீக்கப்பட்ட நடிகைகள் :

இந்த சீரியலின் இரண்டாம் பாகம் தற்போது சென்று கொண்டு இருந்தாலும் முதல் பாகத்தில் வந்த ரக்‌ஷா, ரேஷ்மி என்று இரண்டு நடிகைகளையும் நீக்கியது ரசிகர்களை பெரிதும் அதிர்ச்சியாக்கியது. பின் அவர்கள் இருவருக்கும் பதில் சரவணன் மீனாட்சி ரக்ஷிதா நாயகியாக நடித்து வருகிறார். இருப்பினும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் ரக்ஷா மற்றும் ராஷ்மி விலகியது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக தான் இருந்தது.

-விளம்பரம்-

சீரியலில் இருந்த நீக்கப்பட்டது குறித்து ரக்ஷா :

ஏற்கனவே பேட்டி ஒன்றை அளித்த இந்த சீரியலின் ஒரு நடிகையான ரக்ஷா, லாக்டௌன் அறிவிச்சதும் பெங்களூரு கிளம்பி வந்தேன். ரெண்டரை மாசம் கழிச்சு ஷூட்டிங்னு சொல்லிக் கூப்பிட்டாங்க. அப்ப பெங்களூரு, சென்னை ரெண்டு இடத்துலயுமே பாசிட்டிவ் கேஸ்கள் அதிகமா இருந்ததால எங்க வீட்டுல ஷூட்டிங்ல கலந்துக்க வேண்டாம்னாங்க. சென்னையில தங்கியிருந்தாக்கூட எப்படியாவது ஷூட்டிங்ல கலந்துக்க முயற்சி பண்ணியிருப்பேன். ஸ்டேட் விட்டு ஸ்டேட் வர்றதுல இ-பாஸ் மாதிரியான் நடைமுறைகள் வேற இருந்ததால, `என்னால கலந்துக்க முடியாது’ன்னு சொன்னேன்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘அன்பே சிவம்’ :

திரும்ப முழு லாக்டௌன் முடிஞ்சு மறுபடியும் ஷூட்டிங் தொடங்கினப்ப எனக்கு எந்த அழைப்பும் வரலை என்று கூறியுள்ளார். ஆனால், சமீபத்தில் ஷூடிங் துவங்கி இருக்கிறது. எனக்கு ஒரேயொரு வருத்தம் என்னன்னா, `இதுதான் சூழல், வேற வழி இல்லை’ன்னு எனக்குத் தகவல் சொல்லியிருக்கலாம் என்று வருந்தி இருந்தார். தற்போது இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘அன்பே சிவம்’ என்ற புதிய தொடரில் நடித்து வருகிறார்.

Advertisement