நாட்டாமை பட நடிகர் மரணம் – யாருனு தெரியுதா ? பாத்தா ஷாக்காகிடுவீங்க.

0
3758
natamai
- Advertisement -

நடிகரும் பிரபல கதை ஆசிரியருமான ஈரோடு சௌந்தர் காலமாகியுள்ளார் சம்பவம் திரைத் துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.தமிழில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான நாட்டாமை திரைப்படத்தை பலரும் மறந்திருக்க மாட்டீர்கள். இந்த படத்தில் நடிகர் பொன்னம்பலத்தின் தந்தையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகர்சௌந்தர். இந்த படத்தில் ‘நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு’ என்ற வசனத்தை எவரும் மறந்திருக்க மாட்டார்கள் அந்த வசனத்திற்கு பெருமைக்குரியவர் நடிகர் சௌந்தர் தான்.

-விளம்பரம்-
Director erode soundar passes away

இவரை திரைத்துறையில் ஈரோடு சௌந்தர் என்று தான் அழைப்பார்கள். இப்படி ஒரு நிலையில் இவர் உடல்நலக்குறைவால் காலம் ஆகி இருக்கிறார். ஈரோடு அருகே உள்ள முள்ளாம்பரப்பு நாத கவுண்டன் பாளையம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சௌந்தர். இவர் தமிழில் சேரன் பாண்டியன், நாட்டாமை, பரம்பரை, சமுத்திரம் போன்ற திரைப்படங்களில் வசனங்களை எழுதி சிறந்த வசனகர்த்தாவாக திகழ்ந்தவர் நடிகர் மற்றும் வசனகர்த்தாவாக மட்டும் அல்லாமல் இவர் சரத்குமாரை வைத்து சிம்ம ராசி என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

- Advertisement -

வசனகர்த்தாவாக மட்டுமல்லாமல் இவர் பல படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் மேலும் இவரது இவ்வசனங்களில் வெளியான சேரன் பாண்டியன் நாட்டாமை போன்ற படங்களுக்காக சிறந்த வசனகர்த்தா விருது தமிழக அரசின் விருதுகளை பெற்று சாதனை படைத்தவர். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், சரத்குமார் கூட்டணியில் உருவான ‘நாட்டாமை’ உள்ளிட்ட படங்கள் மூலம், கொங்கு தமிழைத் தமிழகம் முழுவதும் கொண்டுசென்ற பெருமைக்குரியவர் ஈரோடு சவுந்தர்.

இவஇவர், ‘முதல் சீதனம்’ என்ற திரைப்படத்தையும் இயக்கி வெளியிட்டார். செர், ‘முதல் சீதனம்’ என்ற திரைப்படத்தையும் இயக்கி வெளியிட்டார். அதேபோல இவரது பேரனை வைத்து ஐயா உள்ளேன் ஐயா என்று படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் கேஎஸ் ரவிக்குமாரும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஈரோடு சௌந்தர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய தசாவதாரம் படத்திலும் ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்திலும் நடித்திருந்தார். ஈரோடு சௌந்தர் சொந்த ஊரான நாதகவுண்டன் பாளையத்ததில் வசித்துவந்தார். அவருக்கு, 7 ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டது. ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்தார்.

-விளம்பரம்-

இந்த நிலையில், உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட அவர், ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டும் பயன் இல்லாமல், 5-ஆம் தேதி மதியம் இறந்துவிட்டார். அவருக்கு, வயது 63. வளர்மதி என்ற மனைவியும், கலையரசி, காயத்திரி என்ற மகள்களும் உள்ளார்கள். இருமகள்களுக்கும் திருமணம் முடிந்துவிட்டது.இறந்த இயக்குனர் ஈரோடு சவுந்தரின் இறுதிச் சடங்குகள் 6-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அவரது சொந்த கிராமமான நாதகவுண்டம் பாளையத்தில் நடைபெற உள்ளது என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

Advertisement