வாய்ப்பில்லாமல் வறுமையில் தவித்து வந்த காஜா, அம்மாவுக்கு இருந்த பிரச்சனை, திருமுருகன் செய்துள்ள உதவி.

0
217
- Advertisement -

நாதஸ்வரம் சீரியலில் நடித்த காஜா ஃபெரோஸின் தற்போதைய நிலை குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் சின்னத்திரை சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. இதனால் வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறார்கள். மேலும், காலங்கள் கடந்தாலும் மக்களின் பேவரட் சீரியலில் ஒன்று தான் மெட்டிஒலி. 90ஸ் கிட்ஸ்களின் மறக்க முடியாத சீரியலில் ஒன்று மெட்டி ஒலி.

-விளம்பரம்-

ஆண்டுகள் பல கடந்தாலும் தற்போது வரை மக்கள் மெட்டி ஒலி சீரியலை பற்றி மக்கள் பேசிக் கொண்டு தான் இருக்கின்றார்கள். இந்த தொடரின் மூலம் திருமுருகன் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதன் பின் இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் வெளிவந்த தொடர் தான் நாதஸ்வரம். இந்த தொடர் குடும்ப உறவுகளின் கதையை மையமாகக் கொண்டது. இந்த தொடர் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதை தொடர்ந்து இவர் குலதெய்வம் என்ற தொடரை எடுத்திருந்தார்.

- Advertisement -

காஜா ஃபெரோஸ் பேட்டி:

அந்த தொடரும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதற்கு பிறகு திருமுருகன் ஓர் இடைவெளியை எடுத்துக் கொண்டிருந்தார். மேலும், திருமுருகனால் அறிமுகம் செய்யப்பட்ட காஜா ஃபெரோஸ் தற்போது வாய்ப்புகள் எதுவும் இன்றி சொந்த ஊரில் ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து இருக்கிறார். இந்த நிலையில் இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் காஜா பெரோஸ், என்னுடைய சொந்த ஊர் தர்மபுரி. சிறு வயதில் இருந்தே சினிமா என்றால் மிகவும் பிடிக்கும். வீட்டுக்கு தெரியாமல் அடிக்கடி சென்று படம் பார்த்துவிட்டு வருவேன்.

சீரியல் அனுபவம்:

பெரிய ஹீரோக்களின் படங்களை பார்த்துவிட்டு அவர்களைப் போலவே செய்வேன். இதனை பார்த்த ஒருசிலர் நீயும் நடிக்க போலமே என்று ஆசையை தூண்டி விட்டார்கள். அந்த சமயத்தில்தான் திருமுருகன் சார் நாதஸ்வரம் தொடருக்காக ஆடிஷன் செய்கிறார்கள் என்று தகவலை கேள்விப்பட்டு ஆடிஷனுக்காக சென்றிருந்தேன். ஆனால், அங்கே மிகப் பெரிய கூட்டம் இருந்தது. இந்தக் கூட்டத்தில் நம்மை எங்கே தேர்வு செய்யப் போகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால், என்னை தேர்ந்தெடுத்தது மட்டுமல்லாமல் அவர் கூடவே இருக்கும் ஒரு கதாபாத்திரமாக என்னை மாற்றிவிட்டார்.

-விளம்பரம்-

சீரியலுக்கு பின் காஜா:

அந்த தொடர் மூலம் எனக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது. மேலும் எனக்கு சார் அடுத்தடுத்து அவருடைய தொடர்களில் வாய்ப்பு கொடுத்தார். ஆனால், அவர் சீரியலை எடுக்க நிறுத்தியவுடன் எனக்கு வேறு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. அவரை தவிர வேறு யாரும் எனக்கு தெரியாது. என்னை நம்பியும் வீட்டில் சில ஜீவன்கள் இருப்பதால் அவர்களுக்காக வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் சொந்த ஊரில் ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறேன். நான் சீரியலில் சீரியலில் நடிப்பதற்கு முன்பும் மொபைல் கடையில் தான் வேலை செய்திருந்தேன்.

திருமுருகன் செய்த உதவி:

நாதஸ்வரம் சீரியலில் காஜா தைக்கிற பையன் கதாபாத்திரத்தில் நடித்ததால் என்னுடைய பெயர் காஜா என்றே மாறிவிட்டது. தற்போது சீரியலில் நடிப்பதற்கு ஆடிஷன் கொடுத்து விட்டு வந்திருக்கிறேன். கிடைத்தால் நல்லா இருக்கும். கொரோனாவுக்கு பிறகு எல்லாருமே மறந்துட்டாங்க. ஊர் பக்கம் ஏன் சீரியலுக்கு போகலன்னு கேட்பாங்க. அப்படி கேட்கும் போது கஷ்டமாக இருக்கும். கொஞ்ச நாள் வேலை இல்லாமல் இருந்தேன். இதுவரைக்கும் திருமுருகன் சார் தான் என்னை பார்த்துக் கொள்கிறார். வீட்டு வாடகை மூணு மாசம் கொடுக்க முடியவில்லை. அவர் தான் வாடகை கொடுத்தார். அம்மா ஹார்ட் பேஷன்ட். அவர்களுடைய அறுவை சிகிச்சைக்கு சார் தான் ஒன்றரை இலட்சம் கொடுத்து உதவினார் என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement