டேரக்டா 60ஆம் கல்யாணமா ஆன்டி – கிண்டலடித்த 2k கிட். பங்கமாக கலாய்த்த நாதஸ்வரம் சீரியல் நடிகை. யாரு கிட்ட, 90ஸ் கிட்ஸ்டா.

0
11008
sruthi
- Advertisement -

நாடு முழுவதும் கொரானாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருப்பதால் லாக் டவுன் நீடித்துக் கொண்டே செல்கிறது. லாக்டவுன் சமயத்தில் வீட்டில் இருப்பது போரடிக்காமல் இருப்பதற்காக சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் சமூக வலைத்தளங்களை தான் அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த டிவி மற்றும் சினிமா பிரபலங்களின் அன்றாட செயல்களை தெரிந்து கொள்ள ஆர்வமாக கேட்டு வருகிறார்கள். அதில் சில பேர் அத்துமீறி சில கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். இதனால் சில பிரபலங்கள் சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறிய உள்ளார்கள். ஒரு சில பேர் அவர்களுக்கு பதிலடியும் கொடுத்து வருகிறார்கள். ஒரு சில பேர் நாட்டின் பிரதமராக இருந்தாலும் சரி சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் சரி யாரையும் விட்டுவைக்காமல் சோசியல் மீடியாவில் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் தற்போது டிவி சீரியல் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா குறித்து சோசியல் மீடியாவில் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான தொடர் தான் நாதஸ்வரம். இந்த தொடரை திருமுருகன் எழுதி இயக்கி நடித்தும் இருந்தார். இந்த தொடரில் பல பேர் நடித்து இருந்தார்கள். குடும்ப உறவுகளின் கதையை மையமாகக் கொண்டது தான் இந்த தொடர். இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அந்த வகையில் இந்த தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சுருதி சண்முகப்பிரியா. இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார்.

- Advertisement -

இந்நிலையில் ஸ்ருதி அவர்கள் சமீபத்தில் மஞ்சள் நிற சேலையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களை சோசியல் மீடியாவில் பதிவேற்றி வாழ்க்கை வண்ணமயமானது என்று அவர் கருத்தும் பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்த நபர் ஒருவர் கூறியது, நீங்கள் எப்போது அறுபதாவது கல்யாணம் செய்து கொள்ளப் போகிறீர்கள். நான் சிறுவயதிலிருந்தே உங்களுடைய சீரியல்களைப் பார்த்து வருகிறேன். எனக்கு இப்போது 20 வயது ஆகிறது. ஆனால், நீங்கள் எப்போதும் தனியாக இருக்கும் உங்களுடைய ஆன்ட்டி புகைப்படத்தை மட்டும் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று கூறி உள்ளார்.

இதைப் பார்த்த ஸ்ருதி கூறியது, உங்களுக்கு இங்கிலீஷ்ல கமெண்ட் பண்ண தெரிஞ்சா பேசனும். இல்லனா தமிழ்ல யாவது சொல்லணும். அது கூட முடியலன்னா உங்களுக்கு எல்லாம் எதுக்கு கமெண்ட். நான் சிங்கிளா இருக்கிறது கூட எனக்கு கவலையா இல்ல. உன்ன மாதிரி அரைகுறை ஆட்கள் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிடுதல் தான் சகிக்க முடியலை என்று பதிவிட்டுள்ளார். இப்படி ஒரு பதிவிட்டு கருத்து தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement