சரி, இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கிறேன் ஆனா ஒரு கண்டிஷன் – பெற்றோர்களிடம் கூறியுள்ள நாக சைதன்யா. (நல்ல முடிவு தான்)

0
973
nagachai
- Advertisement -

பெற்றோர்கள் ஆசைக்கு இணங்க இரண்டாம் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த நாகசைதன்யா இரண்டாம் திருமணத்திற்கு போட்ட கண்டிஷன் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. தெலுங்கு சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நாகசைதன்யா. தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் நாகார்ஜுனாவின் மகன் ஆவார் நாகசைதன்யா. இவர் 2009ஆம் ஆண்டு வெளிவந்த ஜோஸ் என்ற படத்தின் மூலம் தான் சினிமா துறைக்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துள்ளார். மேலும், கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பு மிகப்பெரிய அளவில் ஹிட்டானது.

-விளம்பரம்-
samantha

இந்த படத்தின் மூலம் தான் நடிகர் நாக சைதன்யாவுக்கும் சமந்தாவிற்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து இவர்கள் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு இரு குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகும் சமந்தா படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். திருமணத்திற்கு பின் இருவரும் வெளிநாடு சுற்றுவது, புகைப்படம், வீடியோ என்று காதல் புறாக்களாக இருந்தார்கள்.

- Advertisement -

நாக சைதன்யா – சமந்தா விவாகரத்து :

இதனால் இவர்கள் இருவரும் தென்னிந்திய சினிமா உலகில் மிக சிறந்த ஜோடிகளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தாவுக்கும், நாகா சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாகவும், இருவரும் விரைவில் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் என பல சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் எழுந்து கொண்டு இருந்தது. பின் இவர்கள் இருவரும் பிரிய இருப்பதாக கடந்த ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள்.

Samantha

நாக சைதன்யா-சமந்தா வதந்தி:

மேலும், இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது. அதோடு இவர்கள் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.மேலும், இவர்கள் இருவரும் பிரிவிற்கு பிறகு தங்களுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். சமந்தா பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். புஷ்பா படத்தில் ஊ சொல்லிறியா என்ற பாடலுக்கு சமந்தா செம்ம குத்தாட்டம் போட்டிருந்தார்.

-விளம்பரம்-

நாக சைதன்யா இரண்டாவது திருமணம்:

இந்த பாடலின் மூலம் சமந்தா ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதையும் கவர்ந்தார் என்று சொல்லலாம். பின் இவர் திரில்லர் கதை களம் கொண்ட படம், ஹாலிவுட் படம், காத்துவாக்குல 2 காதல், சாகுந்தலம், யசோதா போன்று பல படங்களில் சமந்தா மிரட்டிக் கொண்டு வருகிறார். அதேபோல் நாக சைதன்யாவும் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் நடிகர் நாக சைதன்யா இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாக சைத்தன்யா கண்டிஷன் :

பெற்றோரின் வற்புறுத்தலுக்கு இணங்க இரண்டாவது திருமணத்திற்கு நாக சைதன்யா ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் தான் திருமணம் செய்யப் போகும் பெண் நடிகையாக இருக்க கூடாது என்று பெற்றோருக்கு அவர் நிபந்தனை விதித்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நாக சைதன்யாவின் இரண்டாவது திருமணம் குறித்த முறையான அறிவிப்பை அவரது பெற்றோர்கள் விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement